ஆசிரியர்கள் எனும் ஆச்சர்யம்…

Published:

teacher - 2026

அறியாததை அறிந்தும்
தெரியாததை தெரிந்தும்
புரியாததை புரிந்தும்
போதிக்கும் போதிமரங்கள் …

ஆசையாய் தேர்ந்தெடுத்த பணியில்
ஆயிரமாயிரம் கட்டுப்பாடுகள் என்றாலும்
அன்போடு ஏற்கும் ஆச்சர்யங்கள்…

இன்னல்களையே எடுத்துக் கொண்டு
இன்பத்தையே இயல்பாய் தரும்…

ஈடுபாட்டையும் ஈர்க்கும் வகையில்
இசையாய்த் (இசையத்) தரும்….

உலகம் உய்யவே உண்மை உணர்த்தவே
உணர்வுகளின் உருவாய் உபதேசிக்கும் …

ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்து
உதவாதவனாய் வீட்டில் இருந்து
ஊணக் கண்களுக்கும் ஒளி தந்து
ஊமையாய் நிர்வாகத்திடம் பணிந்து நிற்கும்….

என்ன ? எங்கே ? எப்போது? எப்படி ?
என்பதற்கெல்லாம்
விடையாய் விளங்கும் விளக்குகள்…

ஏன் ? என்பதற்கெல்லாம் பதில் தந்து
எளியோரையும் ஏற்றி விட்டு ஏணிகளாய் இருந்தும்
ஏங்காமல் ஏறாமல் நிற்கும் …..

ஐயங்களுக்களை எல்லாம் அகற்றியும்
ஐயகோ என சிலர் கண்டு தவித்தும்
ஐ என ஆச்சர்யம் அடைந்தும்
ஐயாவாய் ஐயனாய் ஐந்தவித்தானாய் ….

ஒன்று முதல் ஓராயிரம் இடையூறுகள் என்றாலும்
ஒதுங்காது கற்பித்தலையே கடவுளாய் காணும்….

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

ஓதுவதை ஒரு தொழிலாய் ஏற்காமல்
ஓங்காரம் இசைப்பதாய் எண்ணி
ஓயாமல் உழைக்கும்….

ஔவையாய் வள்ளுவனாய் பாரதியாய் கம்பனாய்
ஒவ்வொரு நாளும் வேடம் புனணந்தும் புணையா
ஓவியமாய் விளங்கும்….

ஆசிரியனாய் …
பெருமை கொள்ளும்

– குச்சனூர் கோவிந்தராஜன்!

Related articles

Recent articles

spot_img