தகுதியை இழந்துவிட்ட தமிழக அரசு, காவல்துறை, ஊடகங்கள்!

vc attack - 2026

கடந்த இரு நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டையில் ஒரு பத்திரிகையாளரை வன்முறை கும்பல் ஒன்று கடுமையாக தாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஓரிரு தொலைக் காட்சிகளில் இந்த செய்தி வெளியான போதிலும், இது குறித்து தமிழக ஊடகங்கள் அமைதி காப்பது வியப்பளிக்கிறது.

தமிழகத்தில் உள்ள எந்த கட்சியினரும் இந்த தாக்குதல் குறித்து கண்டனத்தை பதிவு செய்யாது இருப்பது, வன்முறை அரசியலை அனைத்து அரசியல் கட்சியினரும் நாடுவதை உணர்த்துகிறது.

ஹிந்து கோவில்கள் குறித்து திருமாவளவன் பேசியதை கண்டிக்க துப்பில்லாத, திராணியில்லாத, முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகள், பிற்காலத்தில் இது போன்ற ஒரு நிலை தங்களுக்கும் வரும் என்பதை உணரவேண்டும். தமிழக காவல் துறை இது வரை இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமல் இருப்பது, தமிழகம் வன்முறை காடாகிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

ஊடகங்கள் இது குறித்து வாய் மூடி மௌனம் காப்பது ஊடக அறத்திற்கு உகந்தது அல்ல. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அ தி மு க அரசு வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மூன்று நாட்களாகியும் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? பயமா? அல்லது வாக்கு அரசியலா?

தொடர்ந்து ஒரு சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் வன்முறை அரசியலில் ஈடுபடுவதை தடுக்க முடியாமல் காவல்துறை கண்கட்டி, வாய்மூடி இருப்பது ஏன்?

ஹிந்து மதம் குறித்தும், பிரதமர் குறித்தும், தேசம் குறித்தும் தரக்குறைவான விமர்சனங்களை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மர்மம் என்ன? தமிழகம் பிரிவினைவாத, வன்முறை செயல்பாடுகளுக்கு துணை போவதை வேடிக்கை பார்க்கிறதா தமிழக அரசு?

வன்முறையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சாதியின் பெயராலோ, அரசியல் கட்சியின் பெயராலோ வன்முறையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்.

விடுதலை சிறுத்தை கட்சியின் மீது உள்ள பாசத்தினாலோ, அச்சத்தினாலோ ஊடகங்கள் இது குறித்து அமைதி காப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து.

நாராயணன் திருப்பதி. (பாஜக)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories