குறுக்கே வந்த நாய்; பிரேக் போட்ட இளைஞர்; லிப்ட் கேட்டுச் சென்ற பெண் பலி

Published:

திருவள்ளூர்: குறுக்கே திடீரென நாய் ஒன்று ஓடியதால், திடீரென பைக்கின் பிரேக்கைப் போட்ட இளைஞர் கீழே விழுந்து காயம் அடைந்தார். அவருடன் லிப்ட் கேட்டு ஏறிச் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள மும்முடிக்குப்பம் கீழாண்டை தெருவைச் சேர்ந்த சக்கரவர்த்தியின் மனைவி தேவகி (45). இவர் நேற்று காலை மும்முடிக்குப்பத்தில் இருந்து வயலூருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த தனஞ்செழியன் (23) என்பவர் பைக்கில் வயலூர் நோக்கிச் சென்றார். அவரிடம் ‘லிப்ட்’ கேட்டு ஏறிக் கொண்டார் தேவகி. உச்சிமேடு காலனி அருகே பைக் சென்றபோது நாய் ஒன்று திடீரென குறுக்கே பாய்ந்து ஓடியது. அதன் மீது மோதாமல் இருக்க, திடீர் ‘பிரேக்’ போட்டார் தனஞ்செழியன். இதனால் பைக் சறுக்கி விழுந்ததில் கீழே விழுந்த தேவகி, தனஞ்செழியன் இருவரும் காயமடைந்தனர். அவர்களை அந்த வழியே சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தேவகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனஞ்செழியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து மப்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img