நெல்லை மாவட்டத்திலுள்ள 33 லட்சம் மக்கள் தொகையில் 86 சதவிகிதத்தினருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி நிறைவு பெற்றுள்ளது என ஆட்சியர் கருணாகரன் தெரிவித்தார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் கருணாகரன் தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் ஆதார் எண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்து கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஆட்சியர் கருணாகரன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியம், பணமாற்று ஆணை மூலம் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசின் அறிவுரையின் பேரில் தொழிலாளர்களின் ஆதார் எண்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி 31.03.2015-க்குள் முழுமையாக முடிவு பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆதார் அடையாள அட்டை பெறும் நபர்களின் புகைப்படம், கைரேகை போன்ற தகவல்கள் இணைத்து ஆதார் எண் வழங்கப்படுவதால் ஆள்மாறாட்டம் செய்வதற்கு சாத்தியமில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், வாக்காளர் பெயர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட ஒவ்வொரு வீடு,வீடாக நேரடியாகச் சென்று மேற்கொண்டு வருகிறார்கள்;. திருநெல்வேலி மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 33 இலட்சம் ஆகும். அதில், 86 சதவிகிதம் நபர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. அரசு பொதுமக்களுக்கு செயல்படுத்தும் நலத்திட்டங்களை எளிதில் பெற ஆதார் எண் மிகவும் அவசியமாகின்றது. பொதுமக்கள் சிரமமின்றி ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் முகாம் செயல்பட்டு வருகின்றது. ஆதார் அடையாள அட்டைகளை பெறாதவர்கள் இம்முகாம்களை பயன்படுத்தி உடனடியாக புகைப்படம் எடுத்துக்; கொள்ள வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை உடனடியாக இணையதளத்தில் பதிவு செய்து அரசு தங்களுக்கு செயல்படுத்தும் நலத்திட்டங்களை சிரமமின்றி பெற்றிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றார். இக்கூட்டத்தில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.அண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Less than 1 min.Read
நெல்லை மாவட்டத்தில் 86 % பேருக்கு ஆதார் அட்டை : ஆட்சியர் கருணாகரன் தகவல்
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!
Entertainment News
Previous article
Next article

