தஞ்சாவூர்: தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில், தனியார் பஸ் ஒன்று, வேன் மீது மோதியதில், 4 பேர் பலியாயினர். நாமக்கல்லைச் சேர்ந்த 7 பேர், ஆம்னி வேனில் கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களுக்குச் சென்றனர். காலை, 9:00 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே, எதிரே வந்த தனியார் பஸ்ஸும் இந்த ஆம்னி வேனும் மோதியதில் ஆம்னி வேன் நொறுங்கியது. இதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு பேர் பலியாயினர். மூன்று பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தை முற்றுகையிட்ட அந்தப் பகுதி மக்கள், தனியார் பஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், சாலையில் வேகத் தடைகள் அமைக்க வேண்டும் என்று தாங்கள் நெடுநாட்களாகக் கோரி வருவதாகவும் கூறினர். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
To Read this news article in other Bharathiya Languages
தஞ்சை அருகே தனியார் பஸ்ஸுடன் வேன் மோதல்: 4 பேர் பலி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari