சென்னை:
பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள தமிழக அரசியலில், மேலும் ஒரு திருப்பமாக, இன்னும் ஒரு வாரத்தில் பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
சட்டப் பேரவைக் கூட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி கூட்டப் படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தினகரன் ஆதரவு அதிமுக., எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க அரசு முயற்சி எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.