இணை மேலாளர் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை!

Published:

SUSIED

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் 8வது மாடியில் பணியிலிருந்தவர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஏழுக் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். வயது 43. தனியார் நிதி. நிறுவனம் ஒன்றில் இணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்

இந்நிலையில் பணிச் சுமை காரணமாகத் தனது அலுவலகம் அமைந்துள்ள ராயாலா டவர்ஸ் கட்டிடத்தின் 8வது மாடியிலிருந்து தற்கொலை செய்துக் கொண்டார்.

மாடியிலிருந்து குதித்த பிரபாகரன் அந்த கட்டிடத்தின் 2ஆவது மாடியிலிருந்த கேண்டீன் பகுதியில் வந்து விழுந்துள்ளார். பிரபாகரன் விழுந்ததைப் பார்த்தவர்கள், உடனடியாக அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்குப் பிரபாகரனைப் பரிசோதித்த மருத்துவர்கள், முன்னதாகவே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட பிரபாகரன் தனது செல்போனில் தற்கொலை தொடர்பாக வீடியோ ஒன்றைப் பதிவு செய்து சென்றுள்ளார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அந்த வீடியோவில் பிரபாகரன், “உயர் அதிகாரி என்னைக் கடந்த 10 மாதங்களாகப் பணி ரீதியாகச் சித்திரவதை செய்து வருகிறார்.

இதன் காரணமாகவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் பிரபாகரன் குறிப்பிட்ட உயர் அதிகாரி செந்தில் என்பவரைக் கைது செய்துள்ளனர்.

செந்தில் மீது தற்கொலைக்குக் காரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட செந்தில் நீதிபதி முன் முன்னிறுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாவட்டத்தின் பிரதான சாலையில் 8வது மாடியிலிருந்து பணிச் சுமை காரணமாக ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Related articles

Recent articles

spot_img