விருதுநகர்: வேலைகேட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்த இளம் பெண்ணையும் மீட்டு பெற்றோரிடம் சூலக்கரை போலீஸார் செவ்வாய்கிழமை ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தையைச் சேர்ந்த கணேசன் என்பவரின் 22 வயது மகளுக்கு சூலக்கரையைச் சேர்ந்த ஆறுமுகத்துடன் திருமணம் நடந்தது. பின்னர் கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் பெற்றோரின் வீட்டிலேயே அவர் இருந்தாராம். இந்நிலையில் இவர் திடீரென கடந்த பிப்.15-ல் மாயமானார். இது குறித்து சூலக்கரை போலீஸில் தந்தை கணேசன் புகார் செய்ததை அடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அவரது செல்போனில் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சி செய்ததில் ஒருமுறை சிக்னல் கிடைக்கவே, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோவில்பட்டியில் இருந்து அவர் பேசியது தெரிந்தது. அப்போது, மாயமான பெண்ணின் செல்பேசி மற்றொரு பெண்ணிடம் இருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. அவரிடம் போலீஸார் விசாரித்ததில் பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். மாயமான பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பே தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் இருந்ததாகவும், அவரைச் சந்திக்கவே கடந்த 15-ம் தேதி வீட்டில் இருந்த 5 சவரன் நகை, பணத்துடன் சென்றதும் தெரியவந்தது. அந்த இளைஞரைச் சந்திக்க முடியாத நிலையில் கோவில்பட்டிக்கு வந்த அந்தப் பெண், பாண்டி என்பவரைச் சந்தித்துள்ளார். அவரை அணுகி வேலை கேட்டதும், அவர் அப்பெண்ணை அதே பகுதியில் அந்தோணிராஜ் (55), மாரியம்மாள் (50) ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார். இருவரும் செண்பகவல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பார்வதியிடம் ஒப்படைத்தனர். அவர் இளம்பெண்ணிடம் இருந்த பணம், நகை மற்றும் செல்பேசி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டதுடன், வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். சில நாள்களுக்கு பின் கோவையில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலைக்குச் சேர்த்துவிட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து, சூலக்கரை காவல் ஆய்வாளர் எஸ்.அன்னராஜ் தலைமையில் போலீஸார் விரைந்து சென்று அப்பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வேலைகேட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்தோணிராஜ், மாரியம்மாள் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான பாண்டி, பார்வதி ஆகியோரைத் தேடி வருகின்றனர்.
Less than 1 min.Read
வேலை கேட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பேர் கைது
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

