விருதுநகர்: வேலைகேட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்த இளம் பெண்ணையும் மீட்டு பெற்றோரிடம் சூலக்கரை போலீஸார் செவ்வாய்கிழமை ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தையைச் சேர்ந்த கணேசன் என்பவரின் 22 வயது மகளுக்கு சூலக்கரையைச் சேர்ந்த ஆறுமுகத்துடன் திருமணம் நடந்தது. பின்னர் கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் பெற்றோரின் வீட்டிலேயே அவர் இருந்தாராம். இந்நிலையில் இவர் திடீரென கடந்த பிப்.15-ல் மாயமானார். இது குறித்து சூலக்கரை போலீஸில் தந்தை கணேசன் புகார் செய்ததை அடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அவரது செல்போனில் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சி செய்ததில் ஒருமுறை சிக்னல் கிடைக்கவே, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோவில்பட்டியில் இருந்து அவர் பேசியது தெரிந்தது. அப்போது, மாயமான பெண்ணின் செல்பேசி மற்றொரு பெண்ணிடம் இருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. அவரிடம் போலீஸார் விசாரித்ததில் பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். மாயமான பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பே தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் இருந்ததாகவும், அவரைச் சந்திக்கவே கடந்த 15-ம் தேதி வீட்டில் இருந்த 5 சவரன் நகை, பணத்துடன் சென்றதும் தெரியவந்தது. அந்த இளைஞரைச் சந்திக்க முடியாத நிலையில் கோவில்பட்டிக்கு வந்த அந்தப் பெண், பாண்டி என்பவரைச் சந்தித்துள்ளார். அவரை அணுகி வேலை கேட்டதும், அவர் அப்பெண்ணை அதே பகுதியில் அந்தோணிராஜ் (55), மாரியம்மாள் (50) ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார். இருவரும் செண்பகவல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பார்வதியிடம் ஒப்படைத்தனர். அவர் இளம்பெண்ணிடம் இருந்த பணம், நகை மற்றும் செல்பேசி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டதுடன், வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். சில நாள்களுக்கு பின் கோவையில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலைக்குச் சேர்த்துவிட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து, சூலக்கரை காவல் ஆய்வாளர் எஸ்.அன்னராஜ் தலைமையில் போலீஸார் விரைந்து சென்று அப்பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வேலைகேட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்தோணிராஜ், மாரியம்மாள் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான பாண்டி, பார்வதி ஆகியோரைத் தேடி வருகின்றனர்.
Less than 1 min.Read
வேலை கேட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பேர் கைது
Hot this week
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Topics
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
சற்றுமுன்
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

