செல்போனில் படம் காட்டி ஆபாசப் பேச்சு: மாணவிகளின் புகாரால் ஆசிரியர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசப் படம் காட்டி ஆபாசமாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தாராபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த காளிமுத்து (வயது 45) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் 2 ஆண்டுக்கு முன்னர் தளவாய்ப்பட்டினத்தில் இருந்து மாற்றலாகி வந்தாராம். ஆசிரியர் காளிமுத்து சில நாட்களாக 7, 8–ம் வகுப்பில் படிக்கும் மாணவிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாசப் படங்களைக் காட்டி அவர்களிடம் ஆபாசமாகப் பேசியுள்ளார். இதனால் அந்த மாணவிகள் வெறுப்படைந்துள்ளனர். ஒரு கட்டத்தில், பொறுமையிழந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் ஆசிரியர் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். அதற்கு அவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்ய வேண்டியதுதானே என்று கூறியுள்ளனர். ‘தலைமை ஆசிரியர் தேர்வு கண்காணிப்பு பணிக்காக சென்றிருப்பதால், அவர் வந்தவுடன் புகார் செய்வதாகக் கூறினர். ஆனால் ஆசிரியரின் தொடர் அத்துமீறலால் கோபமுற்ற மாணவிகளின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர். அதன் பின்னர் தாராபுரம்–கரூர் சாலையில் பள்ளியின் முன்பு மறியலில் ஈடுபட்டு ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அந்த நேரத்தில் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் குணசேகரன் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் அந்த வழியில் சென்றனர். அவர் வந்த காரை பொதுமக்கள் முற்றுகையிட்டு. ஆசிரியரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங்கை தொடர்பு கொண்டு பேசியதன் பேரில், போலீஸ் உயரதிகாரிகள் ஆசிரியர் காளிமுத்துவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் காளிமுத்து கைது செய்யப்பட்டார். அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories