சென்னை: ரசிகமணி டி.கே.சி., என்றழைக்கப்பட்ட டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வட்டத்தொட்டி என்ற இலக்கிய வட்டத்தில் இருந்து தமிழ்ப் பணி வளர்த்த வித்வான் ல.சண்முகசுந்தரம் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95. வித்வான் இல.ச., என்றும், எல்.எஸ். என்றும் இலக்கிய அன்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர். இவர் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தமது மகன் வீட்டில் இன்று காலமானார். இவரைப் பற்றி… திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையிலும், குற்றாலத்திலும் டி.கே.சி நடத்தும் “வட்டத்தொட்டி” கூட்டங்களிலும், ஏனைய இலக்கியக் கூட்டங்களிலும் ல.ச.வின் முக்கியப் பங்கேற்பு இருக்கும். இவர் கி.ராவுக்கு நெருக்கமானவர். இவரிடம் எழுத்தாளர் கழனியூரன் பேட்டிகளும் எடுத்துள்ளார். அந்தப் பேட்டிகள் கதைசொல்லி இதழிலும் வெளிவந்துள்ளது. தன் இறுதிகாலத்தில் தென்காசி அருகே மேலகரத்தில் வாழ்ந்தார். டி.கே.சியின் பேரன் தீப.நடராஜனோடு கடைசிவரை நட்பு பாராட்டியவர். ரசிகமணியினுடைய வாழ்கை வரலாற்றை நூலாக வடித்தவர் ல.சண்முகசுந்தரம். அந்நூலை சாகித்ய அகாடமி வெளியிட்டது. இலக்கிய உலகில் டி.கே.சியின் புகழைத் தாங்கி நின்ற கடைசி சீடர்.
வித்வான் ல.சண்முக சுந்தரம் காலமானார்
Popular Categories


