சென்னை: காவிரி நீர்ப் பிரச்சினையில் கர்நாடக அரசைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் அதன் தலைவர் .சந்திரசேகரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், கர்நாடகத்திலிருந்து தமிழகத்தில் பாயும் காவிரியில் தமிழகத்திற்கான பங்கு வரையறை செய்யப்பட்டு, காவிரி நடுவர் மன்ற ஆணை அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரைப் பெறுவதில் தமிழகத்திற்கு அநீதியே இழைக்கப்பட்டு வந்துள்ளது. கர்நாடகத்தில் அதிக மழை பெய்து அதனால் வெள்ளம் ஏற்பட்டால் மட்டும் உபரி நீர் நமக்கு திறந்துவிடப்பட்டுவருகிறது. அதாவது வெள்ள வடிகாலாகவே தமிழத்தை கர்நாடகம் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், காவிரியின் குறுக்கே எந்த அனுமதியும் பெறாமல் கர்நாடகம் புது அணைகள் கட்ட முயற்சிப்பது, தமிழக விவசாயிகளை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது ஒரு டெல்டா விவசாயிகளின் பிரச்சினை என்று மட்டும் எடுத்துக்கொள்ளாமல், டெல்டா விவசாயி விவசாயம் மேற்கொள்ளாவிட்டால், நாம் சாப்பிட அரிசிக்குக் கூட வெளிநாட்டில் கையேந்தும் நிலை வந்துவிடும் என்று எண்ணிப்பார்த்து, தமிழகம் முழுவதும் உள்ள மக்கள், இளைஞர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவேண்டிய நேரமிது. இது காவிரி டெல்ட்டா விவசாயிகளுக்கான போராட்டம் என்று நினைக்காமல், ஒட்டுமொத்த தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதை உணர்ந்து, காவிரியில் கர்நாடக அரசு தடுப்பணைகள் கட்டும் பிரச்சினைக்காக, வரும் 28-03-2015, சனிக்கிழமை நடைபெறும் முழு அடைப்பில் கலந்துகொண்டு, நமது ஒட்டுமொத்த உணர்வுகளை வெளிப்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்… என்று கூறியுள்ளார்.
Less than 1 min.Read
முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: சிவாஜி பேரவை
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
சற்றுமுன்
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

