தி.க.வின் தாலி அறுக்கும் போராட்டத்தைத் தடுக்கக் கோரி காவல் ஆணையரிடம் மனு!

Published:

சென்னை: வரும் ஏப்.14 அன்று பெரியார் திடலில் தி.க. அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாலி அறுக்கும் போராட்டத்தை தடுக்கக் கோரி, தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளது. மேலும், இச்செயலுக்கு தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் க.அதியமான் தெரிவித்தபோது, தமிழ்ப் பெண்களுக்கு தாலி என்பது ஒரு பாரம்பரிய அடையாளமாக பண்பாட்டுச் சின்னமாக உள்ளது. ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் தனது தாலியை இல்வாழ்வின் புனிதச் சின்னமாகவே போற்றி வருகின்றனர். தமிழர்களின் விழுமியங்களை ஏற்று தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலட்சக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இந்த மங்கல நாணை உளமாற ஏற்றுள்ளனர். இந்நிலையில் தமிழர்களின் பண்பாட்டுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் தி.க. இப்படியான தாலி அறுப்பு போராட்டம் நடத்துவது வேதனையானது. இதைத் தமிழர்கள் ஒரு போதும் ஆதரிக்க முடியாது. இந்தத் தாலி அறுப்புப் போராட்டம் சமூகத்தில் மிகவும் கடுமையான வன்முறைகளைத் தூண்டிவிடக்கூடிய நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது. சமூக, மத மோதல்களைத் தூண்டிவிடக் கூடிய இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தமிழ்நாட்டில் நடத்துவது அபாயகரமானது. சுமூகமான சூழலைக் கெடுக்க தி.க போன்ற அமைப்புகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழ் உணர்வாளர்கள் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இந்தத் தமிழ்ப் பெண்களின் தாலி அறுப்புப் போராட்டத்தை தடுக்கக்கோரி காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். காவல்துறை தடுக்கத் தவறினால் திராவிடர் திடலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து பல்வேறு ஆதரவு அமைப்புகளுடன் போராட்டம் நடத்தப்படும். என்று கூறினார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img