தி.க.வின் தாலி அறுக்கும் போராட்டத்தைத் தடுக்கக் கோரி காவல் ஆணையரிடம் மனு!

சென்னை: வரும் ஏப்.14 அன்று பெரியார் திடலில் தி.க. அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாலி அறுக்கும் போராட்டத்தை தடுக்கக் கோரி, தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளது. மேலும், இச்செயலுக்கு தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் க.அதியமான் தெரிவித்தபோது, தமிழ்ப் பெண்களுக்கு தாலி என்பது ஒரு பாரம்பரிய அடையாளமாக பண்பாட்டுச் சின்னமாக உள்ளது. ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் தனது தாலியை இல்வாழ்வின் புனிதச் சின்னமாகவே போற்றி வருகின்றனர். தமிழர்களின் விழுமியங்களை ஏற்று தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலட்சக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இந்த மங்கல நாணை உளமாற ஏற்றுள்ளனர். இந்நிலையில் தமிழர்களின் பண்பாட்டுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் தி.க. இப்படியான தாலி அறுப்பு போராட்டம் நடத்துவது வேதனையானது. இதைத் தமிழர்கள் ஒரு போதும் ஆதரிக்க முடியாது. இந்தத் தாலி அறுப்புப் போராட்டம் சமூகத்தில் மிகவும் கடுமையான வன்முறைகளைத் தூண்டிவிடக்கூடிய நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது. சமூக, மத மோதல்களைத் தூண்டிவிடக் கூடிய இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தமிழ்நாட்டில் நடத்துவது அபாயகரமானது. சுமூகமான சூழலைக் கெடுக்க தி.க போன்ற அமைப்புகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழ் உணர்வாளர்கள் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இந்தத் தமிழ்ப் பெண்களின் தாலி அறுப்புப் போராட்டத்தை தடுக்கக்கோரி காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். காவல்துறை தடுக்கத் தவறினால் திராவிடர் திடலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து பல்வேறு ஆதரவு அமைப்புகளுடன் போராட்டம் நடத்தப்படும். என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories