சென்னை: வரும் ஏப்.14 அன்று பெரியார் திடலில் தி.க. அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாலி அறுக்கும் போராட்டத்தை தடுக்கக் கோரி, தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளது. மேலும், இச்செயலுக்கு தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் க.அதியமான் தெரிவித்தபோது, தமிழ்ப் பெண்களுக்கு தாலி என்பது ஒரு பாரம்பரிய அடையாளமாக பண்பாட்டுச் சின்னமாக உள்ளது. ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் தனது தாலியை இல்வாழ்வின் புனிதச் சின்னமாகவே போற்றி வருகின்றனர். தமிழர்களின் விழுமியங்களை ஏற்று தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலட்சக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இந்த மங்கல நாணை உளமாற ஏற்றுள்ளனர். இந்நிலையில் தமிழர்களின் பண்பாட்டுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் தி.க. இப்படியான தாலி அறுப்பு போராட்டம் நடத்துவது வேதனையானது. இதைத் தமிழர்கள் ஒரு போதும் ஆதரிக்க முடியாது. இந்தத் தாலி அறுப்புப் போராட்டம் சமூகத்தில் மிகவும் கடுமையான வன்முறைகளைத் தூண்டிவிடக்கூடிய நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது. சமூக, மத மோதல்களைத் தூண்டிவிடக் கூடிய இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தமிழ்நாட்டில் நடத்துவது அபாயகரமானது. சுமூகமான சூழலைக் கெடுக்க தி.க போன்ற அமைப்புகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழ் உணர்வாளர்கள் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இந்தத் தமிழ்ப் பெண்களின் தாலி அறுப்புப் போராட்டத்தை தடுக்கக்கோரி காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். காவல்துறை தடுக்கத் தவறினால் திராவிடர் திடலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து பல்வேறு ஆதரவு அமைப்புகளுடன் போராட்டம் நடத்தப்படும். என்று கூறினார்.
Less than 1 min.Read
தி.க.வின் தாலி அறுக்கும் போராட்டத்தைத் தடுக்கக் கோரி காவல் ஆணையரிடம் மனு!
Hot this week
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

