ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப் பதிவு விறு விறு

srirangam_temple ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் காலை வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 6 மணி வரையில் வாக்குகள் பதிவு செய்யப்படும். மொத்தம் 322 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 16-ம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்குப்பதிவுகள் இணையம் மூலம் ஒளிபரப்பப் படுகின்றன. வாக்குப் பதிவு குறித்த நிலவரத்தை அறிந்து கொள்ள 9444123456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி அறிந்து கொள்ள முடியும் என தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். மொத்தமுள்ள 322 ஒட்டுச் சாவடிகளில் 79 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக உள்பட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 29 பேர் களத்தில் உள்ளனர். தலைமை வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் 1,2,3 என்ற வீதத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பணியாற்றக்கூடிய வாக்குச்சாவடி கணினி மூலம் தேர்வு செய்யப்பட்டது. தொகுதியிலுள்ள 322 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 1,572 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தொகுதியிலுள்ள 138 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 322 வாக்குச்சாவடிகளில் 41 மையங்களிலுள்ள 79 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாகக் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதலாகப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியிலிருந்து தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தேர்தல் நிலவரங்களை அனுப்பும் வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு “டேப்லெட்’ கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு: ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் “வெப் கேமரா’ பொருத்தப்பட்டிருப்பதால் வாக்குப்பதிவை உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக ஒளிபரப்புவதற்குத் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அரசு கேபிள் தொலைக்காட்சி மூலம் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்குப் பதிவுகள் www.election.tn.gov.in என்ற இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories