பாரத தேசத்தை 4 முறை முழுவதுமாக வலம் வந்து நம் ஹிந்து தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்டியவர் ஆதி சங்கரர் !
சைவம் , வைணவம் , சாக்தம் , காணாபத்யம் ,கெளமாரம், செளரம் என்று 6 வழிபாட்டு மதங்களாக நம் பாரத நாட்டின் வழிபாட்டு மதங்களை நெறிப்படுத்தியவர் ஆதி சங்கரர் !
ஆதி சங்கரர் தர்மத்தை நிலை நிறுத்த நாடு முழுவதும் அலைந்து பல சவால்களை சந்தித்தது போல் , தர்மத்தை நிலை நாட்ட பட்டி தொட்டி தோறும் அலைந்து பல சவால்களை சந்தித்து சாமானியனுக்கும் ஆன்மிகம் சென்றடையச் செய்த ஆதி சங்கரரின் அவதாரமாக வாழ்ந்தவர் பூஜ்ய ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் !
வேதம் வாழ பாடசாலைகள் அமைத்தது போல் தேவார வகுப்புக்கள் நடத்தித் தமிழ்த் தொண்டாற்றினார் !
நந்தனாருக்கு விழா எடுப்பதோடு மட்டுமின்றி , பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று ஆலயங்கள் அமைத்து ஆன்மிகப் பணி ஆற்றினார் !
தமிழ் வியாபாரிகள் தமிழ்ப் புத்தாண்டான சித்திரையை மாற்றியதை எதிர்த்து நாம் நடத்திய வெற்றிப் போராட்டத்திற்கு பேருதவியாக இருந்தார் !
இஸ்லாமியக் கொடுங்கோலர்களான ஹைதர் , திப்புவால் அப்புறப் படுத்தப்பட்ட திண்டுக்கல் அபிராமி அம்மன் உடனுறை பத்ம கிரீஸ்வரர் கோவிலை மீட்க பக்தர்கள் எடுத்த முயற்சிகளுக்கு உருதுணையாக இருந்தார் !
பல கோவில் திருப் பணிகள் , கல்விச் சாலைகள் , மருத்துவ சேவைகள் என்று ஆற்றிய சேவைகளை அடுக்கிக் கொண்டே போகலாம் !
ஆதி சங்கரராக , பாரதியாக , அப்பர் பெருமானாக வாழ்ந்து இன்று முக்தி அடைந்த காஞ்சிப் பெரியவரின் ஆசி நம்மை என்றென்றும் வழி நடத்த ஜெகத் குருவையே பிரார்த்திப்போம் !
- பால. கௌதமன் [இயக்குனர், வேத ஆராய்ச்சி மையம்]