சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சிக் காலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் திருவொற்றியூரைச் சேர்ந்த கே.பி.பி.சாமி. இவருடைய மகன் இனியவன் (வயது 28). இவருக்கு பிரசன்யா என்ற மனைவியும், ஆறு மாத பெண் குழந்தையும் உள்ளனர். தந்தையுடன் திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் பகுதியில் கே.பி.பி. சாமி வீட்டிலேயே கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இனியவனுக்கு குடிப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்றிரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அவர் மொட்டை மாடியில் உள்ள தனி அறைக்குச் சென்றுள்ளார். அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் கீழே உள்ள அறையில் படுத்து தூங்கி உள்ளனர். இன்று காலை விடிந்து வெகு நேரமாகியும் இனியவன் எழுந்து வராததால் அவருடைய மனைவி மாடியில் உள்ள அறைக்குச் சென்று கதவை தட்டியுள்ளார். கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்த அவர் ஜன்னலைத் திறந்து பார்த்த போது இனியவன் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. உடனே அலறியடித்தபடி கீழே வந்து குடும்பத்தினரிடம் பிரசன்யா தகவல் தெரிவித்தார். இது குறித்து வந்த புகாரை அடுத்து திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இது குறித்து, கே.பி.பி.சாமி குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர். கே.பி.பி. சாமி, அவரது தம்பியும் திமுக கவுன்சிலருமான கே.பி.பி.சங்கர் ஆகியோர் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்றுள்ளனர். அவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்ட்டது.
2 min.Read
திமுக முன்னாள் அமைச்சரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!
இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா
மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!
மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!
மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!
இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா
மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!
மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!
மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.
சற்றுமுன்
முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!
முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!
அரசியல்
எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!
“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.
அரசியல்
விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!
ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
Entertainment News
Previous article

