விஷ்ணுபிரியா மரணம் குறித்த வழக்கு! சாகும் வரை விடமாட்டேன்: சீறும் ரவி

Published:

vishnupriya - 2026

கோவை: திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ கைவிட்டதாக கோவை தலைமை முதன்மை அமர்வு நீதிமன்றம், விஷ்ணு பிரியாவின் தந்தை ரவிக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால் மே 9 ஆம் தேதி ஆஜராகி தெரிவிக்கும்படி, சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேரில் ஆஜராகி கருத்தை தெரிவிக்கும்படி தெரிவிக்கப் பட்டிருந்ததால், தந்தை ரவி நேரில் ஆஜரானார்.

இதை அடுத்து, இந்த வழக்கில் சாகும் வரை விட மாட்டேன் என்று ரவி கூறியுள்ளார். மேலும், மே 24ஆம் தேதிக்கு விஷ்ணு பிரியா மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் மனு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

சிபிஐ விசாரணை அறிக்கையை படித்த பிறகு எங்கள் தரப்பு ஆட்சேபனைகளை முன்வைப்போம் என்று கூறினார் ரவி. இந்த வழக்கு வழக்கு விசாரணை திருப்தியளிக்கவில்லை என்று ரவி தரப்பு வழக்கறிஞர் அனிதா தகவல் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

விஷ்ணுபிரியாவின் மரணம், தற்கொலை தான் என முடிவு செய்ததால், வழக்கை சிபிஐ கைவிடுவதாக அறிவித்தது குறிப்பிடத் தக்கது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img