December 5, 2025, 8:13 AM
24.9 C
Chennai

அடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து!

srirangam temple - 2025

திருச்சி: திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வசந்த மண்டபத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரபப்பு ஏற்பட்டது.  ஆஸ்தான மண்டபத்தில் கட்டியிருந்த வெட்டி வேர் தீப் பந்தம் பட்டு எரிந்துள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில், நம்பெருமாள் வசந்த மண்டபம் வழியாக ஆஸ்தான மண்டபத்துக்கு எழுந்தருளி, அங்கே பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.  வசந்த மண்டபத்துக்கும் ஆஸ்தான மண்டபத்துக்கும் இடையே 10 அடி நீளத்திலும், 6 அடி அகலத்திலும் பந்தல் அமைத்து, வெட்டிவேர்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கும்.

FB IMG 1527381154452 - 2025

இன்று மாலை 6 மணிக்கு வழக்கம் போல் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து, ஆஸ்தான மண்டபத்துக்கு புறப்பாடு கண்டருளினார்.  அப்போது பெருமாளுக்கு முன்புறம் தீவட்டி ஏந்தி சென்று கொண்டிருந்தனர் தீவார்த்திகள். அப்போது திடீரென தீவட்டி நெருப்பு, பந்தலில் கட்டப் பட்டிருந்த  வெட்டி வேர் மீது பட்டு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது., இதில், வெட்டி வேர் பந்தல் எரிந்து நாசம் அடைந்தது.

FB IMG 1527381192036 - 2025

இதனால், அதிர்ச்சியடைந்த கோவில் பணியாளர்களும், பட்டாச்சார்யர்களும் தீயை அணைத்து விட்டு, கோவில் நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயிலில் ஏதாவது அசம்பாவிதங்கள் தற்போது நடந்து வருவதால், பக்தர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இதை அடுத்து, இது போன்ற  அசம்பாவிதம் நேராமல் நிவர்த்தி ஆகட்டும் என்று, பரிகார பூஜைகள் செய்தனர்.

FB IMG 1527381173891 - 2025

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், அடுத்தடுத்து நடக்கும் அசம்பாவிதங்களால் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சங்கடங்கள் ஏற்படக் கூடும் என்றும், அதற்கான துர் நிமித்தங்கள்தான் இப்படி தீப்பற்றுதல் எல்லாம் என்றூம் கூறுகின்றனர் பக்தர்கள்.

முன்னர் நம்பெருமாள் சென்ற தோளுக்கினியானில், திடீரென தீப்பந்தத்தில் இருந்து தீக் கங்குகள் பட்டு, பெருமாளின் அலங்கார ஆடையில் பட்டது. அதை அடுத்து அப்போது ஜெயலலிதா உடல் நலக் குறைவால் மருத்துவமனைக்குச் சென்றார். அது, ஆட்சியாளருக்கு நேரும் ஆபத்தைக் காட்டிக் கொடுப்பது போல் அப்போது சொல்லப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories