அடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து!

srirangam temple - 2026

திருச்சி: திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வசந்த மண்டபத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரபப்பு ஏற்பட்டது.  ஆஸ்தான மண்டபத்தில் கட்டியிருந்த வெட்டி வேர் தீப் பந்தம் பட்டு எரிந்துள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில், நம்பெருமாள் வசந்த மண்டபம் வழியாக ஆஸ்தான மண்டபத்துக்கு எழுந்தருளி, அங்கே பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.  வசந்த மண்டபத்துக்கும் ஆஸ்தான மண்டபத்துக்கும் இடையே 10 அடி நீளத்திலும், 6 அடி அகலத்திலும் பந்தல் அமைத்து, வெட்டிவேர்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கும்.

FB IMG 1527381154452 - 2026

இன்று மாலை 6 மணிக்கு வழக்கம் போல் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து, ஆஸ்தான மண்டபத்துக்கு புறப்பாடு கண்டருளினார்.  அப்போது பெருமாளுக்கு முன்புறம் தீவட்டி ஏந்தி சென்று கொண்டிருந்தனர் தீவார்த்திகள். அப்போது திடீரென தீவட்டி நெருப்பு, பந்தலில் கட்டப் பட்டிருந்த  வெட்டி வேர் மீது பட்டு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது., இதில், வெட்டி வேர் பந்தல் எரிந்து நாசம் அடைந்தது.

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

FB IMG 1527381192036 - 2026

இதனால், அதிர்ச்சியடைந்த கோவில் பணியாளர்களும், பட்டாச்சார்யர்களும் தீயை அணைத்து விட்டு, கோவில் நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயிலில் ஏதாவது அசம்பாவிதங்கள் தற்போது நடந்து வருவதால், பக்தர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இதை அடுத்து, இது போன்ற  அசம்பாவிதம் நேராமல் நிவர்த்தி ஆகட்டும் என்று, பரிகார பூஜைகள் செய்தனர்.

FB IMG 1527381173891 - 2026

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், அடுத்தடுத்து நடக்கும் அசம்பாவிதங்களால் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சங்கடங்கள் ஏற்படக் கூடும் என்றும், அதற்கான துர் நிமித்தங்கள்தான் இப்படி தீப்பற்றுதல் எல்லாம் என்றூம் கூறுகின்றனர் பக்தர்கள்.

முன்னர் நம்பெருமாள் சென்ற தோளுக்கினியானில், திடீரென தீப்பந்தத்தில் இருந்து தீக் கங்குகள் பட்டு, பெருமாளின் அலங்கார ஆடையில் பட்டது. அதை அடுத்து அப்போது ஜெயலலிதா உடல் நலக் குறைவால் மருத்துவமனைக்குச் சென்றார். அது, ஆட்சியாளருக்கு நேரும் ஆபத்தைக் காட்டிக் கொடுப்பது போல் அப்போது சொல்லப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories