போத்தீஸை மிரட்டி ரூ.7 லட்சம் பறித்த ‘சமூக சேவகர்’ பியூஷ் மானுஷ் மீது புகார்!

piyush manush - 2026

சேலம் : மரத்தை வெட்டியதாக போத்தீஸ் நிறுவனத்தை மிரட்டி 7 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாகக் கூறி ‘சமூக சேவகர்’ பியூஸ் மனுஷ் மீது வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.

இது குறித்து தேசிய மக்கள் இயக்கம் அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது…

சேலத்தில் போத்தீஸ் துணி கடை அண்மையில் திறக்கப் பட்டது. அந்த நிறுவனத்தினர் கடைக்கு முன் இருந்த மரங்களை அரசின் முன் அனுமதி பெறாமல் வெட்டினர்.. இதை அறிந்த மாவட்ட நிர்வாகம், உடனடியாக தொடர்புடைய நிறுவனத்தார் மீது புகார் பதிவு செய்ய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சேலத்தில் குடியிருந்துவரும் ராஜஸ்தானைச் சேர்ந்த பியூஸ் மானுஷ் என்ற நபர், இந்த இடத்துக்குச் சென்று மரம் வெட்டுவதை வீடியோ எடுத்து, அநியாயம் அக்கிரமம் நடக்கிறது, போத்தீஸ் நிறுவனம் பெரிய பெரிய மரங்களை வெட்டி வீழ்த்திவிட்டது. அயோக்கியர்களை விடமாட்டேன் என குரல் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார்.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

பின்னர் அந்த நிறுவனத்தை மிரட்டி, இவர் நடத்தி வரும் சேலமே குரல் கொடு அமைப்புக்கு மரம் வளர்ப்பதற்காக, ரூ.7 லட்சம் நன்கொடை பெற்றுள்ளார். இப்படி நன்கொடை என்ற பெயரில் தன் சமூக விரோதச் செயல்களுக்கு நிதி சேர்த்துள்ளார் பியூஷ் மானுஷ்.

இவர் சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிராக அப்பாவி விவசாயிகளைத் தூண்டி கலவரம் ஏற்படுத்தி வருகிறார். சேலம் சென்னை 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை சீர்குலைக்க போராட்டம் செய்ய கூலிக்கு ஆள் தேவை, மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆட்களைத் திரட்டி வருகிறார். இதற்காக இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சமூக விரோதச் செயல்களுக்கு பயன்படுத்தி வரும் இவரது பராமரிப்பில் உள்ள மூர்கனேரி, குமரகிரி ஏரி அகியவற்றை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கையகப் படுத்த வேண்டும்…- என்று கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

complaint1 - 2026

complaint2 - 2026

complaint3 - 2026

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories