December 5, 2025, 8:01 PM
26.7 C
Chennai

டாஸ்மாக் விபரீதம்: மது குடிக்க பணம் தராத தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!

TASMAC - 2025

புதுக்கோட்டை: டாஸ்மாக்-கினால் ஏற்படும் விபரீதங்களில் ஒன்றாக, மது குடிக்க பணம் தராத தந்தையை மகன் வெட்டிக் கொன்று, மதுவின் கோர அரக்க முகத்தை காட்டியுள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள பெருங்களூரைச் சேர்ந்த விவசாயி சேகர். 50 வயதாகும் இவருக்கு மணிகண்டன், அருண் என இரு மகன்கள்.

27 வயதாகும் மகன் அருண் வேலை எதற்கும் செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு தகராறு செய்வாராம். மது குடிப்பதற்காக பணம் கேட்டு, தந்தையிடம் தொந்தரவு செய்து வந்துள்ளார். தன் மகன் இப்படி குடித்து வீணாகிக் கொண்டிருக்கிறானே என வருத்தப்பட்ட தந்தை சேகர், மகன் வளர்ந்து பெரியவன் ஆகி விட்டதால், அடிக்க மனமின்றி, வேலைக்குச் செல்லும்படி அறிவுரை கூறுவாராம்.

இந்நிலையில் வழக்கம்போல் அருண், தன் தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். ஆனால் சேகர் அதற்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சேகர், அருகில் இருந்த அரிவாளை எடுத்து பெற்ற தந்தை என்றும் பாராமல் கண் மூடித்தனமாக வெட்டியுள்ளார். இதனால் ரத்தம் அதிகம் வெளியேறிய நிலையில் மயங்கிச் சரிந்துள்ளார் சேகர். நினைவற்றுக் கிடந்த சேகரை அவரது உறவினர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற தன் தம்பி மீது சேகரின் மூத்த மகன் மணிகண்டன் கந்தர்வகோட்டை போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அருணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுக் கடைகளால் ஏற்படும் விபரீதங்களுக்கு எல்லை இல்லாமல் போய்க் கொண்டிருப்பதும், அதை அரசு வேடிக்கை பார்த்தபடி மது விற்பனையைப் பெருக்க இலக்கு வைத்து கடைகளை மேலும் மேலும் திறப்பதும் வேதனைக்குரியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories