?கடையநல்லூரில் சுமார் 8 கிலோ மீட்டடர் தொலைவுக்கு 2 மணி நேரமாக திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சரி செய்ய போதிய காவலர்கள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், குற்றாலம் வந்து குளித்துவிட்டு செல்லும் போது கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் குறுகிய சாலையில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லும்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாததால் பிரச்னை தீவிரமடைந்து, வாகனங்களை எடுக்கவில்லை. இதனால், வரிசையாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதை அடுத்து, கொல்லம் – திருமங்கலம் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது.
சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் போக்குவரத்து நெரிசல் சீரானது.



