காவிரிக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம்: என்ன சொல்கிறார் எடப்பாடி?

08 July02 edapaadi palani sami - 2026

சென்னை : சட்டமன்றத்தில் காவிரி விவகாரம் குறித்த விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது திமுக சார்பில் பேசிய துரைமுருகன், காவிரி விவகாரத்தில் முடிவு எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தமிழக சட்டப் பேரவையில் பேசிய, எதிர்க் கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து சுட்டிக் காட்டினார். அதேபோல் தமிழகத்திலும் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்துப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தமிழக பிரதிநிதிகளை அழைத்துக் பேசி எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு பொருந்தும்.

காவிரி ஆணையத்தின் செயல்பாடுகளை பொறுத்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இன்றைய கூட்டத்தில் அனைத்து பிரச்னைகளும் பேசித் தீர்க்கப்படும். தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்று வரும் வகையில் முதல் ஆலோசனைக் கூட்டம் அமையும்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிச்சயம் நிலைநாட்டப்படும்… என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது, தீர்ப்பு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பனவற்றை எல்லாம் பார்த்தபிறகு, அவசியம் ஏற்பட்டால் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories