December 5, 2025, 6:25 PM
26.7 C
Chennai

சிலை திருட்டில் சிக்காமல் 11 ஆண்டுகள் டபாய்த்தவர்… சீக்ரெட்டாக சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்!

paramadurai nellai silai kadaththal - 2025

சென்னை: பல கோடி ரூபாய் மதிப்பு சிலைகள் திருடப்பட்ட வழக்கில் சிக்காமல் 11 ஆண்டுகள் போலீஸாரை சுற்ற விட்டு ஏமாற்றிக் கொண்டிருந்தவரை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள நாறும்பூநாத ஸ்வாமி கோயிலில் இருந்து கடந்த 2005ஆம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டன. இது தொடர்பாக சுபாஷ் சந்திர கபூர், வல்லப பிரகாஷ், ஆதித்ய பிரகாஷ், தீனதயாளன் உள்ளிட்ட 17 பேரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து நாறும்பூநாத ஸ்வாமி கோயிலின் ஆடல்வல்லான் நடராஜர் விக்ரஹம் உள்பட சிவகாமி அம்பாள், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திரதேவர், வெயில்காத்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் என 9 விக்ரஹங்கள் மீட்கப்பட்டன.

இந்தத் திருட்டு வழக்கில் தொடர்புடைய நெல்லை மாவட்டம் தாழையூத்தைச் சேர்ந்த பரமதுரை என்பவரை கடந்த 11 ஆண்டுகளாக போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், ரகசிய தகவலின் பேரில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரமதுரையைக் கைது செய்தனர்.

அதன் பின்னர் அவர் கும்பகோணம் கூடுதல் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப் பட்ட பரமதுரை, 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

1 COMMENT

  1. ஐ. ஜி. பொன்மாணிக்கவேல் சாருக்கு பாராட்டுக்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories