spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்நடிகை செல்லுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது!

நடிகை செல்லுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது!

சென்னை: சீரியல் நடிகை ஜெயலட்சுமியிடம் தொடர்ந்து செல்போன்களில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது செய்யப் பட்டனர்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. நேபாளி படத்தில் அறிமுகமான இவர், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தற்போது டிவி சீரியல்களில் நடித்து வரும் இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட செல்போன் எண்களில் இருந்து வாட்ஸ்அப் மூலம் பல தொடர் தகவல்கள் வந்தன.

நீங்கள் டேட்டிங்கை விரும்புகிறீர்களா? உங்களுடன் வர வி.ஐ.பி.க்கள் காத்திருக்கிறார்கள். ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரையிலும் தருவதற்கு தயாராக இருக்கிறார்கள் என செய்தி அனுப்பி பாலியல் தொழிலுக்கு வலைவிரித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். அதில் தனக்கு செல்போனில் தேவையற்ற அழைப்புகளை அனுப்பி தொல்லை தரும் நபர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப் படும் என்று அவர் உறுதியளித்தார்.

அதன்படி, விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகப்பெருமான், கவியரசன் இருவரும் நடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி தொல்லை தந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை பிடிக்க வாடிக்கையாளர் போல பேச்சு கொடுத்த போலீசார், அண்ணாநகர் பகுதிக்கு வரவழைத்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

author avatar
Senkottai Sriram
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe