காவேரி வாசலில் பிரியாணி விநியோகம்! பத்திரிகையாளர்களுக்கும் தொண்டர்களுக்குமாம்!

foods supplied kauvery - 2026

சென்னை: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டு சிகிசையில் உள்ள திமுக., தலைவர் கருணாநிதியைப் பார்ப்பதற்கும் அவர் குறித்த தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கும், காவேரி மருத்துவமனை வாசலில் தொண்டர்கள் அணி திரண்டு காத்திருக்கின்றனர். தமிழக திராவிட அரசியலின் முக்கிய ஆளுமை என்பதால், கருணாநிதி குறித்த செய்திகளை சேகரிக்க இரவு பகலாக கண் துஞ்சாமல் காவேரி மருத்துவமனை வாசலில் ஊடகத்தினர் காத்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில்,  சரியான வகையில் உணவும் தண்ணீரும் கிடைக்காமல் தொண்டர்களும் பத்திரிகையாளர்களும் அவதிப் பட்டு வருகின்றனர். இது குறித்து செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், திமுக. தொண்டர்களின் சோர்வைப் போக்க வேண்டும் என்று திமுக., பிரமுகர் ஒருவர் டிவிட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்தார்…. “திமுக., காவிரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ள கழக தொண்டர்களுக்கு உணவு பொட்டலம் & குடிநீர் பாட்டில்களை கழக சென்னை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஏற்பாடு செய்யலாமே.. அண்ணன்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்..”

இதைப் படித்த திமுக.,வின் ஜே.அன்பழகன் “உங்கள் யோசனைக்கு நன்றி, நாளை முதல் கழகத் தோழர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் உணவு, குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படும்.” என்று அறிவித்தார்.

இதை அடுத்து, நேற்று பத்திரிகையாளர்கள், தொண்டர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப் பட்டது. இதை தனது டிவிட்டர் பதிவில் பதிவிட்டார் ஜே.அன்பழகன்.

பத்திரிகையாளர்களுக்கு பிரியாணி, கழகத் தோழர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு மதிய உணவு, 5000 குடிநீர் பாட்டில்கள் சற்று முன் வழங்கப்பட்டது. மேலும் இரவு “Fried Rice” வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன…- என்று பதிவு செய்து, சில புகைப்படங்களையும் வெளியிட்டார்.

தொடர்ந்து, கலைஞரை பார்க்க வருபவர்களுக்கு மனதளவிலே சோகம் இருக்கனும் உடலளவில் சோகம் இருக்க கூடாது என்று நினைத்து உணவு வழங்கிய அண்ணன் அவர்களுக்கு நன்றி என்று டிவிட்கள் பறந்தன.

இதை அடுத்து, இன்று முதல் மூன்று வேளை உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார் ஜே.அன்பழகன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories