காவேரி வாசலில் பிரியாணி விநியோகம்! பத்திரிகையாளர்களுக்கும் தொண்டர்களுக்குமாம்!

Published:

foods supplied kauvery - 2026

சென்னை: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டு சிகிசையில் உள்ள திமுக., தலைவர் கருணாநிதியைப் பார்ப்பதற்கும் அவர் குறித்த தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கும், காவேரி மருத்துவமனை வாசலில் தொண்டர்கள் அணி திரண்டு காத்திருக்கின்றனர். தமிழக திராவிட அரசியலின் முக்கிய ஆளுமை என்பதால், கருணாநிதி குறித்த செய்திகளை சேகரிக்க இரவு பகலாக கண் துஞ்சாமல் காவேரி மருத்துவமனை வாசலில் ஊடகத்தினர் காத்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில்,  சரியான வகையில் உணவும் தண்ணீரும் கிடைக்காமல் தொண்டர்களும் பத்திரிகையாளர்களும் அவதிப் பட்டு வருகின்றனர். இது குறித்து செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், திமுக. தொண்டர்களின் சோர்வைப் போக்க வேண்டும் என்று திமுக., பிரமுகர் ஒருவர் டிவிட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்தார்…. “திமுக., காவிரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ள கழக தொண்டர்களுக்கு உணவு பொட்டலம் & குடிநீர் பாட்டில்களை கழக சென்னை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஏற்பாடு செய்யலாமே.. அண்ணன்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்..”

இதைப் படித்த திமுக.,வின் ஜே.அன்பழகன் “உங்கள் யோசனைக்கு நன்றி, நாளை முதல் கழகத் தோழர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் உணவு, குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படும்.” என்று அறிவித்தார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

இதை அடுத்து, நேற்று பத்திரிகையாளர்கள், தொண்டர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப் பட்டது. இதை தனது டிவிட்டர் பதிவில் பதிவிட்டார் ஜே.அன்பழகன்.

பத்திரிகையாளர்களுக்கு பிரியாணி, கழகத் தோழர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு மதிய உணவு, 5000 குடிநீர் பாட்டில்கள் சற்று முன் வழங்கப்பட்டது. மேலும் இரவு “Fried Rice” வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன…- என்று பதிவு செய்து, சில புகைப்படங்களையும் வெளியிட்டார்.

தொடர்ந்து, கலைஞரை பார்க்க வருபவர்களுக்கு மனதளவிலே சோகம் இருக்கனும் உடலளவில் சோகம் இருக்க கூடாது என்று நினைத்து உணவு வழங்கிய அண்ணன் அவர்களுக்கு நன்றி என்று டிவிட்கள் பறந்தன.

இதை அடுத்து, இன்று முதல் மூன்று வேளை உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார் ஜே.அன்பழகன்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img