ஸ்டாலின் நெத்தில துன்னீரு பூசி அனுப்பின தயாளு அம்மா! : தலைவர் பதவிக்கு தயாராவுறாருல்ல…!

stalin mother - 2026

சென்னை: தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய கிளம்பிய ஸ்டாலினுக்கும் பொருளாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய கிளம்பிய துரைமுருகனுக்கும் திருநீறாகிய விபூதியைப் பூசி விட்டு, வாழ்த்தும் ஆசியும் கொடுத்து அனுப்பி வைத்தார் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி காலமானதைத் தொடர்ந்து, திமுக.,வை வழிநடத்த தலைவர் பதவியில் ஸ்டாலினை அமர்த்துவது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி திமுக செயல் தலைவராக இருந்த ஸ்டாலின், தலைவர் பதவிக்கும், முதன்மை செயலாளராக இருந்த துரைமுருகன் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக இன்று காலை கருணாநிதியின் சமாதியில் வேட்புமனுவை வைத்து ஆசி பெற்ற இருவரும் பின்னர் கோபாலபுரத்துக்குச் சென்றனர். அங்கே அவர்கள் கருணாநிதியின் படத்துக்கு விளக்கேற்றி வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றனர். தொடர்ந்து அவர்களுக்கு வீட்டில் உள்ளவர்கள் வாழ்த்து கூறினர்.

பின்னர் ஸ்டாலினும் துரை முருகனும் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றனர். அப்போது அவர்கள் இருவரின் நெற்றியிலும் விபூதி வைத்து ஆசி வழங்கினார் தயாளு அம்மாள். அதனை தன் வழக்கப்படி உடனே ஸ்டாலின் தன் கையால் அழிக்கவில்லை. இதன் பின்னர் இருவரும் சேர்ந்து அண்ணா அறிவாலயத்துக்குச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கடந்த மாதம் திருவரங்கம் வந்திருந்த மு.க.ஸ்டாலினுக்கு கோயிலின் சார்பில் மரியாதை வழங்கப் பட்டது. அப்போது கோயில் பட்டர் ஸ்டாலினின் நெற்றியில் திலகம் வைத்தார். ஆனால் உடனே அதனை அழித்துவிட்டார் ஸ்டாலின்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories