அயனாவரத்தில் சிறுமியை சீரழித்த கயவர்கள் 17 பேருக்கு குண்டாஸ்

Published:

child rape case 11 securities - 2026
சென்னை : சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மாற்று திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த வழக்கில் 17 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த வாய் பேச இயலாத பள்ளிச் சிறுமியை, அவர் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பணி செய்து வந்த வாட்ச்மென், லிஃப்ட் ஆபரேடர், பிளம்பர் உள்ளிட்ட 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்தனர். அவர்களால் உடலாலும் மனதாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட அச் சிறுமி, தன் சகோதரியிடம் சொன்னதன் பேரில் காவல் துறையில் புகார் அளிக்கப் பட்டது. அதன் பின்னர் மேற்கொள்ளப் பட்ட விசாரணையில், கடந்த ஜூலை மாதம் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து, கைது செய்யப்பட்ட 17 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்!

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img