புறநகர் மின்சார ரயிலை கவிழ்க்க சதியா? சிக்கியது ’குடி’ மாணவர்கள்!

velachery train - 2026

சென்னை: சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்புகள் இருந்தன. இதனை தொலைவிலேயே கண்டுவிட்ட ரயில் ஓட்டுனர், வண்டியை நிறுத்த முயன்றார். இருப்பினும் வண்டி மெதுவாக வந்து சிலாப்புகள் மீது ஏறி இறங்கின. இதனால் அந்த சிமிண்ட் சிலாப்புகள் நொறுங்கின.

இருப்பினும் ரயில் ஓட்டுநரின் துரித செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. இந்தச் செய்தி ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாங்கள் தினந்தோறும் சென்று வரும் ரயிலில் ஏதாவது அசம்பாவிதம் நேரும் முன்னர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அச்சத்துடன் கோரிக்கை வைத்தனர்.

மது போதையில் யாராவது சிமெண்ட் சிலாப்பை தண்டவாளத்தில் வைத்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இந் நிலையில், இது குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர்ந்து செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி மீண்டும் சிமெண்ட் சிலாப் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியை உடனே வந்து பார்வையிட்டார் ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு. தொடர்ந்து அங்கே  விசாரணை மேற்கொண்டு சுமார் மூன்று கி.மீ.தொலைவுக்கு நடந்தே வந்து அந்தப் பகுதியைப் பார்வையிட்டார்.

இதனை அடுத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ரயிலைக் கவிழ்க்கும் நோக்கத்துடன் சிமிண்ட் சிலாப் வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட பணம் திரட்டுவதற்காக தண்டவாளத்தில் 3 பேர் சிமெண்ட் சிலாப் வைத்தது தெரிய வந்தது.

சிமெண்ட் சிலாபில் உள்ள கம்பியை விற்று மது குடித்த 3 மாணவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories