புறநகர் மின்சார ரயிலை கவிழ்க்க சதியா? சிக்கியது ’குடி’ மாணவர்கள்!

velachery train - 2026

சென்னை: சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்புகள் இருந்தன. இதனை தொலைவிலேயே கண்டுவிட்ட ரயில் ஓட்டுனர், வண்டியை நிறுத்த முயன்றார். இருப்பினும் வண்டி மெதுவாக வந்து சிலாப்புகள் மீது ஏறி இறங்கின. இதனால் அந்த சிமிண்ட் சிலாப்புகள் நொறுங்கின.

இருப்பினும் ரயில் ஓட்டுநரின் துரித செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. இந்தச் செய்தி ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாங்கள் தினந்தோறும் சென்று வரும் ரயிலில் ஏதாவது அசம்பாவிதம் நேரும் முன்னர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அச்சத்துடன் கோரிக்கை வைத்தனர்.

மது போதையில் யாராவது சிமெண்ட் சிலாப்பை தண்டவாளத்தில் வைத்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இந் நிலையில், இது குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர்ந்து செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி மீண்டும் சிமெண்ட் சிலாப் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியை உடனே வந்து பார்வையிட்டார் ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு. தொடர்ந்து அங்கே  விசாரணை மேற்கொண்டு சுமார் மூன்று கி.மீ.தொலைவுக்கு நடந்தே வந்து அந்தப் பகுதியைப் பார்வையிட்டார்.

இதனை அடுத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ரயிலைக் கவிழ்க்கும் நோக்கத்துடன் சிமிண்ட் சிலாப் வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட பணம் திரட்டுவதற்காக தண்டவாளத்தில் 3 பேர் சிமெண்ட் சிலாப் வைத்தது தெரிய வந்தது.

சிமெண்ட் சிலாபில் உள்ள கம்பியை விற்று மது குடித்த 3 மாணவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories