கேரளா செல்லும் சரக்குவாகனங்கள் புளியரை சோதனைசாவடியில் நிறுத்தம்

kerala loo
புளியரை சோதனைசாவடியில் நிறுத்தப்பட்டுள்ளவாகனங்கள்
  செங்கோட்டை:கேரளாவில் இடதுசாரி தொழிலாளர் சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனங்களுக்கான 3–வது நபர் காப்பீட்டு தொகை உயர்வை கண்டித்து மோட்டார் தொழிலாளர்களும், மீனவர்களுக்கு எதிரான மீனாகுமாரி கமிஷன் அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி மீனவ தொழிலாளர்களும், ரப்பர் விலை வீழ்ச்சி உள்பட விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து இந்த முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. முழு அடைப்பு போராட்டம் காரணமாக கேரளாவில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களும் ஓடவில்லை. கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. கேரளாவில் நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக தென்காசி,செங்கோட்டையிலிருந்து இருந்து கேரளாவுக்கு பேருந்துக்கள் இயக்கப்படவில்லை. வழக்கமாகதென்காசி,செங்கோட்டையிலிருந்து ,கொல்லம்,திருவனந்தபுரம் ,பாலக்காடு, கொச்சின் உள்பட கேரளாவின் பல்வேறு இடங்களுக்கும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும்.5 பேருந்துக்களும்,கேரளமாநிலத்தில் இருந்து தமிழக கேரளா எல்லைப்பகுதியான தென்காசி,செங்கோட்டைக்கு 40க்கும் மேற்ப்பட்ட பேருந்துக்கள் இயக்கப்பட்டன.ஆனால் இன்று அந்த பேருந்துக்களும் முற்றிலுமாக இயக்கப்படாமல் டெப்போவில் நிறுத்தப்பட்டன. இதனால் எல்லைப்பகுதி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் கேரளாவுக்கு செல்லும் பொதுமக்கள் பஸ் நிலையம் வந்து பரிதவிப்புக்குள்ளாகினர். பின்னர் அவர்கள்தனியார் வாகனங்கள் மூலம் கேரளா புறப்பட்டனர். இதனால் தென்காசி,செங்கோட்டையிலிருந்து இருந்து கேரளா செல்லும் ஆட்டோ,கார்களில் கூட்டம் அலைமோதியது. செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் புளியரை சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளன.இதன் காரணமாக .எல்லையில் எராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கியுள்ளன.தினமும் ஆயிரக்கணக் காண வாகனங்கள் செல்லும் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையான இந்த சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories