‘தாலியறுக்கும்’ வீரமணியைக் கைது செய்யும்வரை போராடுவோம்: தேவநாதன் யாதவ்

devanathan-vanathi சென்னை: தாலி அறுக்கும் போராட்டத்தை அறிவித்துள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திராவிடர் கழகம் சார்பில் வரும் 14ஆம் தேதி தாலி அறுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும், போராட்டத்தற்கு தடை விதிக்க கோரியும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் தலைமையில், சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய டாக்டர் தி. தேவநாதன் யாதவ், இந்து கடவுள்களை குறிவைத்து, விமர்சனம் செய்வது, கொச்சைப்படுத்துவது, போன்றவற்றின் மூலம் வயிற்று பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கும் கி. வீரமணி, தைரியமாக வெளியே நடமாடிக்கொண்டிருக்கிறார் என்றும், இதனை தாலிக்குத் தங்கம் வழங்கும் தமிழக அரசும், வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். கி. வீரமணி போன்றவர்களை கண்டிக்கவோ, தண்டிக்கவோ, இந்த அரசுக்கு தைரியமில்லை என்றும், வீரமணிக்கு இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தாலி அறுப்பது என்பது கணவரின் மறைவுக்கு பின்பு, ஒரு மனைவி செய்வது என்றும், அது அவர்களுடைய விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார். இந்து மதத்துடன் மட்டுமே மோதும் வீரமணி, இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற பிற மதங்களுடன் மோதுவது இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்து மதத்தை விமர்சிக்கும் போக்கை மாற்றிக்கொள்ள வீரமணி தவறினால், லட்சக்கணக்கானோரை திரட்டி பெரியார் மாளிகையை முற்றுகையிட்டு, அவரை அங்கிருந்து வெளியேற்றப்போவதாக அவர் எச்சரித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் பேசிய தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் பிரிவு தலைவரும், வசந்த் தொலைக்காட்சி நிறுவனருமான வசந்தகுமார், இந்தியன் என்ற முறையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், இந்தியா பல மதங்கள் மற்றும் இன மக்களை கொண்ட நாடாகும் என்றும், இதனை கொச்சைப்படுத்தும் வகையிலும், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் தாலி அறுக்கும் போராட்டத்தை கி.வீரமணி அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார். தமிழக பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் பேசுகையில், தமிழகத்தில் பகுத்தறிவை மக்களிடம் கொண்டு செல்வதற்காக தொடங்கப்பட்ட திராவிடர் கழகம், இந்து கடவுள்களையும் சின்னங்களையும் தொடர்ந்து அவமதித்து வருவதாக தெரிவித்தார். கேள்வி கேட்கும் கருத்து சுதந்திரத்தை இந்து தர்மம் அனுமதிக்கிறது என்று அவர் கூறினார். முதலில் தாலி அறுக்கும் போராட்டம் என்று அறிவித்த கி.வீரமணி, பின்னர் எதிர்ப்பை கண்டு தாலி அகற்றும் போராட்டம் என்று திருத்தம் செய்ததை அவர் சுட்டிக்காட்டினார். கிறிஸ்தவர்கள் தாலிக்கு பதிலாக சிலுவையை அணிகிறார்கள் என்றும், இதேபோல் இஸ்லாமியர்களும் மங்கலநானை அணிவதாகவும் தெரிவித்தார். தமிழ் சமுதாயம் போதைக்கும் இலவசத்திற்கும் அடிமையாகிவிட்டதாகவும், இந்த நிலை மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், சிறுபான்மை புரட்சி இயக்கத் தலைவர் லியாகத் அலிகான், ஆய்தம் இயக்க நிர்வாகி நாதன், திருமதி. அனுசந்தரமௌலி, ராதாராஜன், ஆகியோர் பேசினர். முன்னதாக குத்துவிளக்கு ஏற்றி, இறைவாழ்த்துடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories