சென்னை: தண்ணீர் லாரி மோதி குடும்பத்துடன் ஒரே பைக்கில் சென்ற 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே லாரி சாலையில் நின்றுகொண்டிருந்த வாலிபர் மீது மோதியதில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீஸார் கூறியதாவது… பொழிச்சலூர் சம்பந்தனார் நகரைச் சேர்ந்தவர் மகேஷ் (29). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த இவர், தனது மனைவி பிரீத்தி (24) , 2 வயது குழந்தை ரியா, தாய் சரோஜா (65) ஆகியோருடன் பல்லாவரம் சந்தைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் பின்னால் வந்த தண்ணீர் லாரி மகேஷ் பைக் மீது மோதுவது போல் வந்துள்ளது. இதை கவனித்த பிரீத்தி தனது குழந்தையை சற்று தள்ளி தூக்கி வீசியுள்ளார். அதே நேரம் அந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பிரீத்தி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான பிரீத்தியின் உடலை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த மகேஷ், அவரது தாய் சரோஜா, குழந்தை ரியா ஆகியோரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் மகேஷ் உயிரிழந்தார். பாட்டியும் பேரனும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் இந்த லாரி மோதி இளைஞர் ஒருவரும் உயிரிழந்தார். ஒரு குடும்பம் உள்பட 5 பேர் ஒரே விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதவு செய்து லாரி டிரைவர் சுரேஷை (32) கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பல்லாவரம் சந்தையில் பகுதியில் நின்று கொண்டு இருந்த இளைஞர் மீது மோதிவிட்டு நிற்காமல் வந்ததும், அந்த விபத்தில் அவர் பலியானதும் தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் வந்தபோது தான் மற்றொரு விபத்து ஏற்பட்டு கணவன் மனைவி பலியானதும் தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி பல்லாவரம் கண்டோன்மெண்டுக்கு சொந்தமானது என்றும் அந்த லாரியை தாற்காலிக டிரைவர் சுரேஷ் ஓட்டிவந்தார் என்பதும் தெரிய வந்தது. இன்று காலை நடந்த இந்த விபத்தால் பல்லாவரம் சந்தை பகுதியில் பெரும் சோகம் நிலவியது.
Less than 1 min.Read
சென்னையில் தண்ணீர் லாரி மோதி குடும்பமே பலி
Hot this week
மதுரை
குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்
தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics
மதுரை
குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்
தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

