திருவாரூர்: காதலை எதிர்த்து உறவினர்களே மணப்பெண்ணை வெட்டினர். மருத்துவமனையில் குற்றுயிரும் குலையுயிருமாக அனுமதிக்கப்பட்டிருந்த காதலிக்கு, காதலன் தாலியைக் கட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள அரித்துவாரமங்கலம் வ.உ.சி. நகரைச் சேர்ந்தவ வரதராஜன் மகள் கலைச்செல்வி (25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் இளையராஜா(31) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 2 வருடமாக அவர்கள் காதலித்து வந்த நிலையில், கலைச்செல்வியின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவருக்கு கொரடாச்சேரியில் மாப்பிள்ளை பார்த்தால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி இதைத் தன் காதலனிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் இருவரும் எடுத்த முடிவின் படி, கலைச்செல்வி தன் காதலனுடன் சென்று அவரது வீட்டில் தங்கினார். இது குறித்து ஊர்ப் பஞ்சாயத்தில் முறையிடப்பட அவர்கள் இருவருக்கும் (இன்று) திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். திருமணத்துக்கு தேவையான தாலி மற்றும் பொருட்கள் வாங்க நேற்று இரவு இளையராஜா அம்மாப்பேட்டை வந்தார். வீட்டில் கலைச்செல்வி மற்றும் இளையராஜாவின் வயதான தாய் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது கலைச்செல்வியின் சித்தப்பாக்கள் கலியபெருமாள், ரகுபதி, இவரது மகன் ஆனந்த் என்கிற ரகுவரன், கலைச்செல்வியின் தம்பி மணிகண்டன் ஆகியோர் அங்கு வந்து, அரிவாளால் கலைச்செல்வியை வெட்டினர். உருட்டு கட்டையால் தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இது குறித்து அரித்துவாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துகு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கலைச்செல்வியை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதை அடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ரகுபதியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற மூவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், கலைச்செல்வி சிகிச்சை பெற்று வந்த தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த காதலன் இளையராஜா , அவர் காதலி அருகே இருந்து கவனித்து வந்ததுடன், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த இதே நாளில் கலைச்செல்வி கழுத்தில் தாலி கட்டினார்.
Less than 1 min.Read
காதலை எதிர்த்து அரிவாள் வெட்டு: மருத்துவமனையில் தாலி கட்டிய காதலன்
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

