வேலூர்: வேலூர் சிறையில், கைதி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, அஜாக்கிரதையாக இருந்ததாக நான்கு அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (29) கடந்த 2012ம் ஆண்டு மனைவியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். நேற்று முன்தினம் சிறைக்குள் இருந்த மணிகண்டன் திடீரென காணாமல் போகவே, அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறை வளாகத்தில் இருந்த கிணற்றில் மணிகண்டனின் உடல் மிதப்பது கண்டுபிடிக்கப் பட்டது. மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அஜாக்கிரதையாக பணியாற்றியதாக துணை ஜெயிலர் காளிதாஸ், உதவி ஜெயிலர் சர்தார்பாஷா, முதன்மை தலைமை வார்டன் நீலகண்டன், தலைமை வார்டன் தங்கமுத்து ஆகிய 4 பேரையும் பணி இடைநீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று காலை மாஜிஸ்திரேட் வேலூர் மத்தியச் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மணிகண்டனின் உடல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சடலத்தை பெற்றுக் கொள்ள உறவினர்கள் யாரும் முன்வராததால் வேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
2 min.Read
வேலூர் சிறையில் கைதி தற்கொலை: அதிகாரிகள் 4 பேர் இடைநீக்கம்
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
இந்தியா
திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!
திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.
உங்களோடு ஒரு வார்த்தை
வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
கட்டுரைகள்
சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
இந்தியா
திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!
திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.
உங்களோடு ஒரு வார்த்தை
வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
கட்டுரைகள்
சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
உரத்த சிந்தனை
இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
விளையாட்டு
FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!
இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026
உரத்த சிந்தனை
மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?
இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.
Entertainment News
Next article

