சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 உயர்ந்து, சனிக்கிழமை ரூ.20,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வருடம் 2015 பிப்ரவரி 7-ஆம் தேதி வரை தங்கம் பவுன் ஒன்றுக்கு ரூ.21 ஆயிரம் என்ற அளவிலேயே விற்பனை செய்யப்பட்டது. பின்னர் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைந்து, ரூ.20 ஆயிரத்துக்கும் கீழ் சரிவைக் கண்டது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றத்தால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தங்கம், வெள்ளி விலையில் நிலையற்ற தன்மையே நீடிக்கிறது. இந்த மாற்றம், அட்சய திருதியை நெருங்கும் வரை தொடரும். அன்று கிராம் ஒன்றுக்கு ரூ.2,600 முதல் ரூ.2,700 வரை விலை உயரும் வாய்ப்புள்ளது என நகை வணிகர்கள் தெரிவித்தனர். சனிக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கம் பவுனுக்கு ரூ.104-ம், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.35 உயர்ந்து காணப்பட்டது. சனிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்) ஒரு கிராம் தங்கம் 2,530 ஒரு பவுன் தங்கம் 20,240 ஒரு கிராம் வெள்ளி 39.70 ஒரு கிலோ வெள்ளி 37,085 வெள்ளிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்) ஒரு கிராம் தங்கம் 2,517 ஒரு பவுன் தங்கம் 20,136 ஒரு கிராம் வெள்ளி 39.60 ஒரு கிலோ வெள்ளி 37,050
தங்கம் பவுனுக்கு ரூ.104 உயர்வு
Popular Categories


