பெந்தேகோஸ்தே சபை வளாகத்திற்குள் தாக்குதல்

Published:

 pavoorchathram  பாவூர்சத்திரம் பெந்தேகோஸ்தே சபை வளாகத்திற்குள்  தாக்குதல் பாவூர்சத்திரம் அருகே உள்ள முத்துகிருஷ்ணாப்பேரி வடக்கு தெருவில் பெந்தேகோஸ்தே சபை உள்ளது. இங்கு  பெந்தகோஸ்தே அமைப்பைச் சேர்ந்த 19 குடும்பத்தினர் ஜெபம் செய்து வருகின்றனர். இந்த சபையில் 25வது பிரதிஷ்டை பண்டிகைக்காக சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த சண்முகம் மகன் பவுல் துரைராஜ் (39) வந்திருந்தார். சம்பவத்தன்று  பவுல் துரைராஜூம் முத்துக்கிருஷ்ணப்பேரி காமராஜ்நகர் தெற்கு தெருவை சேர்ந்த கருப்பன் மகன் முருகன் என்ற தினகரன் (56) ஆகியோர் நின்று பேசி கொண்டிருந்தனர். அந்தநேரத்தில்  சபையின் பின்புறத்தில் இருந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று பேர் கையில் கம்பி மற்றும் கம்புடன் வந்து அங்கிருந்த டியூப்லைட்யை உடைத்தனர். இதை தடுக்க முயன்ற இருவரையும் சரமாரியாக தாக்யுள்ளனர் இதுகுறித்து  வெளியில் சொன்னால்  கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துதுள்ளனர் இந்த தாக்குதலில் பவுல் துரைராஜ், தினகரன் இருவரும்  பலத்த காயமடைந்தனர். இவர்களை உடனிருந்தவர்கள்  108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் சாமுவேல் ராஜையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img