December 6, 2025, 7:26 AM
23.8 C
Chennai

நெல்லையில் மக்கள் குறை தீர் கூட்டம்

நெல்லையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ. 12.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கருணாகரன் வழங்கினார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் கருணாகரன்  தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேல், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுகன்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சம்பத், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நிர்மலா, மாவட்ட வழங்கல் அலுவலர் சேகர் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1,80,000 வீதம் மொத்தம் ரூ.3,60,000 க்கான காசோலைகளையும், 2 பயனாளிகளுக்கு  தலா ரூ.22,500 வீதம் மொத்தம்  ரூ.45,000 க்கான காசோலைகளையும், 4 பயனாளிகளுக்கு ரூ.15000 வீதம் மொத்தம் ரூ.60,000 க்கான காசோலைகளையும் ஆக மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.4,65,000 க்கான காசோலைகளையும்,
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ்  திருநெல்வேலி வட்டத்தைச் சார்ந்த 6 பயனாளிகளுக்கு நலிந்தோர் உதவித்தொகையாக தலா ரூ.10,000-வீதம் மொத்தம் ரூ.60,000 க்கான காசோலைகளையும், விபத்து உதவித் தொகையாக 1 பயனாளிக்கு ரூ.15,000க்கான காசோலையினையும், ஆக மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.75,000 க்கான காசோலைகளையும்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வெள்ளாங்குழி, சிவந்திபுரம், அடைச்சாணி, வீராசமுத்திரம், கீழநத்தம், மருதூர், பத்மனேரி ஆகிய 7 கிராமங்களைச் சார்ந்த  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.7,00,000 க்கான காசோலைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் மூலம் 3 பயனாளிகளுக்கு  விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளையும், 9 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும்,
மாவட்ட வழங்கல் அலுவலகத்தின் மூலம் 1 மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கும், 1 நரிக்குறவர்  குடும்பத்திற்கும் ஆக மொத்தம் 2 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், மீன்வளத்துறையின்  சார்பாக மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு கடல்சார் கல்வி ஊக்கத்தொகையாக ராதாபுரம் வட்டம், கூட்டப்புளி கிராமத்தைச் சார்ந்த ஜிவிக்கு   ரூ.50,000க்கான காசோலையினையும் ஆக மொத்தம் ரூ.12 லட்சத்து 90ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கருணாகரன் வழங்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories