நெல்லையில் மக்கள் குறை தீர் கூட்டம்

நெல்லையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ. 12.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கருணாகரன் வழங்கினார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் கருணாகரன்  தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேல், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுகன்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சம்பத், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நிர்மலா, மாவட்ட வழங்கல் அலுவலர் சேகர் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1,80,000 வீதம் மொத்தம் ரூ.3,60,000 க்கான காசோலைகளையும், 2 பயனாளிகளுக்கு  தலா ரூ.22,500 வீதம் மொத்தம்  ரூ.45,000 க்கான காசோலைகளையும், 4 பயனாளிகளுக்கு ரூ.15000 வீதம் மொத்தம் ரூ.60,000 க்கான காசோலைகளையும் ஆக மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.4,65,000 க்கான காசோலைகளையும்,
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ்  திருநெல்வேலி வட்டத்தைச் சார்ந்த 6 பயனாளிகளுக்கு நலிந்தோர் உதவித்தொகையாக தலா ரூ.10,000-வீதம் மொத்தம் ரூ.60,000 க்கான காசோலைகளையும், விபத்து உதவித் தொகையாக 1 பயனாளிக்கு ரூ.15,000க்கான காசோலையினையும், ஆக மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.75,000 க்கான காசோலைகளையும்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வெள்ளாங்குழி, சிவந்திபுரம், அடைச்சாணி, வீராசமுத்திரம், கீழநத்தம், மருதூர், பத்மனேரி ஆகிய 7 கிராமங்களைச் சார்ந்த  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.7,00,000 க்கான காசோலைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் மூலம் 3 பயனாளிகளுக்கு  விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளையும், 9 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும்,
மாவட்ட வழங்கல் அலுவலகத்தின் மூலம் 1 மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கும், 1 நரிக்குறவர்  குடும்பத்திற்கும் ஆக மொத்தம் 2 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், மீன்வளத்துறையின்  சார்பாக மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு கடல்சார் கல்வி ஊக்கத்தொகையாக ராதாபுரம் வட்டம், கூட்டப்புளி கிராமத்தைச் சார்ந்த ஜிவிக்கு   ரூ.50,000க்கான காசோலையினையும் ஆக மொத்தம் ரூ.12 லட்சத்து 90ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கருணாகரன் வழங்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories