கரூர் – கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆண்டாங்கோயில் மேல்பாகம் பகுதியில் சிறுவர்களுக்கான உணவு பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தை நடத்தி வருபவர் கவின் (42), இவர் இப்பகுதியில் கடந்த 4 வருடங்களாக இதே பகுதியில் இந்த நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை திடீர் தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் சுமார் 2 மணிநேரம் தீயணைப்பு வீரர்களின் போராட்டத்தில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ 1.50 கோடி சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து கரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் தீ விபத்து கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே சிறுவர்கள் சாப்பிடும் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் திடீர் தீ விபத்து – சுமார் 1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
Popular Categories



