கோவையில் கஞ்சா விற்ற கேரளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கைது

கோவை: கோவையில், சி.எம்.எஸ் கல்லூரியில் கஞ்சா விற்பனை செய்த கேரளத்தைச் சேர்ந்த மாணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்த விஜய் (20) என்ற மாணவர் கோவை அருகே சின்ன வேடம்பட்டியில் உள்ள ஒரு சி.எம்.எஸ் கலை அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார். விடுதியில் தனியாக அறை எடுத்துத் தங்கி வரும் இவர் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா பயன்பாடு பரவலாக உள்ளது என்று சரவணம்பட்டி போலீசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து திங்கள்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, கஞ்சா பயன்படுத்திய மாணவர்கள் சிலர் பிடிபட்டனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த மாணவர்களுக்கு விஜய் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதை அடுத்து, விஜயை கைது செய்த போலீஸார், அவர் தங்கியிருந்த அறையில் பதுக்கி வைத்திருந்த 1.2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் விஜய் கோவில்பாளையம், துடியலூர் பகுதிகளில் வியாபாரிகளிடம் கஞ்சா வாங்கி மாணவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் கோவை பகுதியில் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories