தி.க.வினரா? நகை திருட்டு கும்பலா?: பூணூல் அறுப்பு விவகாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

சென்னை: வயதான அர்ச்சகர்களின் பூணூலை 6 பேர் கொண்ட கும்பல் அறுத்து தாக்கி காயப்படுத்திச் சென்ற சம்பவம் குறித்து கருத்துதெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அவர்கள் தி.க.வினரா அல்லது நகை திருட்டு கும்பலா  என்ற சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை… சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 80 வயது முதியவர் திரு.விஸ்வநாத குருக்கள் அவர்கள் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பும்போது திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சிலர் இரு சக்கர வாகனத்தில் வந்து முதியவரின் கன்னத்தில் அறைந்து அவரது கையை முறித்து அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து அவமானபடுத்தி உள்ளனர். அவரது வேட்டியையும் கழற்றி எறிந்து கோழைத்தனமான செயலை செய்துவிட்டு துணிச்சலுக்கு பெயர் பெற்ற பெரியார் அவர்களின் பெயரை முழங்கிவிட்டு சென்றுள்ளனர். இந்த நபர்கள் திராவிட கழகத்தை சேர்ந்தவர்களா அல்லது நகை பறிக்கும் திருட்டுக் கும்பலை சேர்ந்தவர்களா என்று சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

கொள்கையோடு கொள்கை மோத வேண்டிய தருணத்தில் கொலைவெறித் தாக்குதலை முதியவர் மீது காட்டி இருக்கிற கோழைத்தனமான நபர்களை அந்த இயக்கம் எப்படி ஏற்றுக்கொள்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இது போன்ற சம்பவங்கள் தொடரும் போது அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துக்கொண்டால் நல்லது என்று கருதுகிறேன். இது மாதிரியான தவறுகள் மேலும் நடக்காத வண்ணம் அந்த இயக்கங்களை சேர்ந்தவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன். முதியோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழகக் காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அவ்வியக்கத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories