தி.க.வினரின் அராஜகம்: அரசு நடவடிக்கை எடுக்க ராம.கோபாலன் வேண்டுகோள்

திராவிடர் கழகத்தின் அராஜகம் மீண்டும் அரங்கேறுகிறது. தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று அவர்  வெளியிட்ட அறிக்கை:
நேற்று முன்தினம் சென்னையில் மூன்று பேர் வீட்டில் புகுந்து அவர்களை தாக்கி, அவமானப்படுத்தி, சமயச் சின்னங்களை அறுத்து திராவிடர் கழகம் மீண்டும் தனது அராஜகப்போக்கை தமிழகத்திற்கு நிகழ்த்தி காட்டியிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்கெடுக்கவும், பொது அமைதியை குலைக்கவும் திட்டமிட்டு திராவிடர் கழகமும் அதன் தலைவர் வீரமணியும் கயவாளித்தனத்தை அரங்கேற்றியுள்ளனர்.
தமிழக முதல்வர் இவ்விஷயத்தை சீரிய கவனம் செலுத்தி, பொது அமைதிக்கு கெடுதல் விளைவிக்கும் திராவிடர் கழகத்தினரை அனைவரையும் கைது செய்ய காவல்துறைக்கு ஆணையிட வேண்டும். திராவிடர்கழகம் இந்துவிரோத, தேச விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை நாடே அறியும். இதனால் சட்ட ரீதியாக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்துக்களை கிள்ளுக்கிரையாக நினைத்து திராவிடர் கழகம் தனது பழைய அராஜக போக்கை கையில் எடுத்திருக்கிறது. பிராமணர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய தீயோரின் செயல், அடுத்து ஆன்மிகக் கேந்திரங்களாக விளங்கும் ஆதினங்கள், மடங்கள், மகான்களின் ஜீவசமாதிகள் மீதும், கோயில்கள் மீதும் தாக்குதல் திரும்பலாம் என எச்சரிக்கிறோம்.
திராவிடர் கழகத்தின் கீழ்த்தரமான செயலை இந்துக்கள் இனி பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். தி.க. சமீபத்தில் தாலி அகற்றும் போராட்டத்தை விளம்பரப்படுத்தியவுடனே தமிழகத்தில் உள்ள தாய்மார்கள் தங்களது எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்தினார்கள்.
நடுநிலையாளர்கள் இத்தகைய சமூக விரோத செயலை கண்டிக்கவும், அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி இனி இந்துக்களிடையே செல்லுபடியாகாது. இவர்கள் வழியிலேயே இவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க இந்து சமுதாயம் துணிந்துவிட்டால், அது அரசியின் செயலற்ற தன்மையாகக் கருதப்படும். சட்டத்தை மக்கள் கையில் எடுக்கக்கூடாது என்றால், அரசாங்கம் தீயோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கி நல்லோர்களை காக்கும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, தனி மனித உரிமைக்கு எதிராக செயல்பட்ட திராவிடர் கழகத்தினர் கடுமையாக தண்டிக்கும் வகையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories