தி.க.வினரின் அராஜகம்: அரசு நடவடிக்கை எடுக்க ராம.கோபாலன் வேண்டுகோள்

திராவிடர் கழகத்தின் அராஜகம் மீண்டும் அரங்கேறுகிறது. தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று அவர்  வெளியிட்ட அறிக்கை:
நேற்று முன்தினம் சென்னையில் மூன்று பேர் வீட்டில் புகுந்து அவர்களை தாக்கி, அவமானப்படுத்தி, சமயச் சின்னங்களை அறுத்து திராவிடர் கழகம் மீண்டும் தனது அராஜகப்போக்கை தமிழகத்திற்கு நிகழ்த்தி காட்டியிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்கெடுக்கவும், பொது அமைதியை குலைக்கவும் திட்டமிட்டு திராவிடர் கழகமும் அதன் தலைவர் வீரமணியும் கயவாளித்தனத்தை அரங்கேற்றியுள்ளனர்.
தமிழக முதல்வர் இவ்விஷயத்தை சீரிய கவனம் செலுத்தி, பொது அமைதிக்கு கெடுதல் விளைவிக்கும் திராவிடர் கழகத்தினரை அனைவரையும் கைது செய்ய காவல்துறைக்கு ஆணையிட வேண்டும். திராவிடர்கழகம் இந்துவிரோத, தேச விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை நாடே அறியும். இதனால் சட்ட ரீதியாக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்துக்களை கிள்ளுக்கிரையாக நினைத்து திராவிடர் கழகம் தனது பழைய அராஜக போக்கை கையில் எடுத்திருக்கிறது. பிராமணர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய தீயோரின் செயல், அடுத்து ஆன்மிகக் கேந்திரங்களாக விளங்கும் ஆதினங்கள், மடங்கள், மகான்களின் ஜீவசமாதிகள் மீதும், கோயில்கள் மீதும் தாக்குதல் திரும்பலாம் என எச்சரிக்கிறோம்.
திராவிடர் கழகத்தின் கீழ்த்தரமான செயலை இந்துக்கள் இனி பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். தி.க. சமீபத்தில் தாலி அகற்றும் போராட்டத்தை விளம்பரப்படுத்தியவுடனே தமிழகத்தில் உள்ள தாய்மார்கள் தங்களது எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்தினார்கள்.
நடுநிலையாளர்கள் இத்தகைய சமூக விரோத செயலை கண்டிக்கவும், அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி இனி இந்துக்களிடையே செல்லுபடியாகாது. இவர்கள் வழியிலேயே இவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க இந்து சமுதாயம் துணிந்துவிட்டால், அது அரசியின் செயலற்ற தன்மையாகக் கருதப்படும். சட்டத்தை மக்கள் கையில் எடுக்கக்கூடாது என்றால், அரசாங்கம் தீயோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கி நல்லோர்களை காக்கும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, தனி மனித உரிமைக்கு எதிராக செயல்பட்ட திராவிடர் கழகத்தினர் கடுமையாக தண்டிக்கும் வகையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Topics

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories