தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் : போலீசில் புகார் அளித்த பெண் வீட்டார்

திருவண்ணாமலை: செங்கத்தில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஒருவர் ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் போலீசில் புகார் அளித்தனர். செங்கம் துக்கா பேட்டையைச் சேர்ந்த முனுசாமியின் மகன் செந்தில்குமார்(26) மின்வாரிய இளநிலைப் பொறியாளராகப் பணியில் உள்ளார். செந்தில்குமாருக்கும் ஆற்காட்டைச் சேர்ந்த முதுநிலைப் பட்டதாரிப் பெண் ஒருவருக்கும் பெற்றோரால் திருமணத்துக்கு நிச்சயிக்கப்பட்டு, ஏற்பாடு நடைபெற்றது. புதன் இன்று காலை 6–7.30 மணி அளவில் முகூர்த்தம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிக்கை அடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதை அடுத்து, நேற்று இரவு துக்காப்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் மணமக்கள் அழைப்பு நடந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர், இன்று காலை 4 மணி அளவில் மணமகன் செந்தில்குமார், புரோகிதரை போன் மூலம் தொடர்பு கொண்டு வெளியில் சென்றுவிட்டு வருவதாகக் கூறி வெளியில் சென்றார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவர் மண்டபத்துக்குத் திரும்பவில்லை. முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில், மாப்பிள்ளையை பல இடங்களில் தேடியும் போனில் தொடர்பு கொண்டும், அவர் அகப்படவில்லை. முகூர்த்த நேரம் கடந்த நிலையில், மணமகன் மண்டபத்துக்கு வராததால், அந்தத் திருமணம் நின்று போனது. இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெண் வீட்டார், செங்கம் போலீசில் புகார் அளித்தனர். அவர்களது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பூபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். திருமணம் பிடிக்காமல் செந்தில்குமார் ஓடி விட்டாரா அல்லது அவரை யாரேனும் கடத்திவிட்டார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories