திருச்சி: திருச்சி சுங்கத் துறையில், சுங்கத் துறை அலுவலகத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ தங்கம் மாயமான வழக்கு தொடர்பாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள மத்திய கலால்-சுங்க ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 14.5 கிலோ தங்கம் மாயமானது கடந்த சனிக்கிழமை கண்டறியப்பட்டது. இதை அடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப் படும் தங்கம், விலை உயர்ந்த பொருள்கள் அனைத்தும் திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள மத்திய கலால்-சுங்க ஆணையர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் தங்கத்தின் மதிப்பு ரூ. 1 கோடிக்கு மேல் இருந்தால் அதைக் கடத்தி வரும் நபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு முடியும் வரை அந்த தங்கம் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படும். அவ்வகையில், சில மாதங்களுக்கு முன்னர் முத்துப்பேட்டையில் காரில் ஒருவர் கடத்தி வந்த 22 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டன. இதுவரை 75 கிலோ தங்கம் வரை பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருக்கிறதாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிங்கப்பூரில் இருந்து டைகர் ஏர்வேஸ் விமானத்தில் வந்த நவாஸ்கான் என்பவர் கொண்டு வந்த 7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அதை சுங்கத் துறை ஆணையர் கே.சி. ஜானி சனிக்கிழமை நள்ளிரவு பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கச் சென்றார். அப்போது, ஏற்கெனவே அதில் வைக்கப்பட்டிருந்த 75 கிலோ தங்கத்தில் 14.5 கிலோ தங்கம் திருடப்பட்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. இதையடுத்து அவர், சனிக்கிழமை நள்ளிரவு 12.30க்கு திருச்சி கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரை அடுத்து காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அங்கே சென்று அனைவரிடமும் விசாரணை நடத்தினர். மேலும், சுங்கத் துறை அலுவலகத்தில் வெளியே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். திருடப்பட்டுள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் 3.50 கோடி ரூபாய் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்படவில்லை என்பதால், அங்கே பணிபுரியும் அதிகாரிகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அலுவலகத்தில் உதவி ஆணையர் வெங்கடேசலு அளித்த புகாரையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் நேற்று காலை ரகசிய விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே 15 கிலோ தங்கம் மாயமான வழக்கு தொடர்பாக சுங்கத்துறை ஆய்வாளர் செந்தில்குமார், பாதுகாப்பு பெட்டக கண்காணிப்பாளர் முகமது பரூக் ஆகிய 2 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Less than 1 min.Read
சுங்கத்துறையில் 15கிலோ தங்கம் மாயமான விவகாரம்: அதிகாரிகள் 2 பேர் இடைநீக்கம்
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!
வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே போதும் என்பார்கள்
ஆன்மிகச் செய்திகள்
ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...
இந்தியா
வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!
வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே போதும் என்பார்கள்
ஆன்மிகச் செய்திகள்
ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...
இந்தியா
வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...
சற்றுமுன்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...
அரசியல்
இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?
Entertainment News
Previous article

