இன்ஸ்பெக்டரைத் தாக்கிய மாணவர் மீது அரசியல் ‘கருணை’

சென்னை: சென்னையில், கோவில் கும்பாபிஷேகத்தில், கல்லூரி மாணவர் ஒருவர், இன்ஸ்பெக்டரை தாக்கிய சம்பவம், போலீசார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை குரோம்பேட்டை, எம்.சி., நகர், முதல் பிரதான தெருவில் சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில், பம்மல், மூங்கில் ஏரி, பொன்னி நகர், பாரதியார் தெருவை சேர்ந்த பாண்டி மகன் பாலச்சந்தர், 18, என்பவரும் இருந்தார். படப்பை தனியார் பொறியியல் கல்லூரி, மூன்றாமாண்டு மாணவரான அவர், போலீசார் பாதுகாப்புக்காகப் போட்டிருந்த தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் திருமலை, மாணவரை தடுத்து நிறுத்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், மாணவர், திருமலையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவரை அங்கிருந்த போலீசார் பிடித்து, சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தகவலறிந்த ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் சிபாரிசில், மாணவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யக்கூடாது என, போலீசாருக்கு உத்தரவு சென்றதாக கூறப்படுகிறது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களிடம், மாணவர் பாலச்சந்தர் தகராறில் ஈடுபட்டதாக சிறிய வழக்கு பதிவு செய்து, அபராதத் தொகை மட்டும் வசூலிக்கப்பட்டதாம். இது குறித்து போலீசார் சிலர் கூறுகையில், பணியில் இருந்த இன்ஸ்பெக்டரை, கல்லூரி மாணவர் ஒருவர், பொது இடத்தில் தாக்கியதற்கு, வழக்கு பதிவு செய்ய இயலவில்லை எனில், கீழ் நிலையில் உள்ள எங்களை போன்ற சாதாரண காவலர்களுக்கு எந்தவித பாதுகாப்பு உத்திரவாதமும் இல்லை எனப் புலம்பினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories