இன்ஸ்பெக்டரைத் தாக்கிய மாணவர் மீது அரசியல் ‘கருணை’

சென்னை: சென்னையில், கோவில் கும்பாபிஷேகத்தில், கல்லூரி மாணவர் ஒருவர், இன்ஸ்பெக்டரை தாக்கிய சம்பவம், போலீசார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை குரோம்பேட்டை, எம்.சி., நகர், முதல் பிரதான தெருவில் சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில், பம்மல், மூங்கில் ஏரி, பொன்னி நகர், பாரதியார் தெருவை சேர்ந்த பாண்டி மகன் பாலச்சந்தர், 18, என்பவரும் இருந்தார். படப்பை தனியார் பொறியியல் கல்லூரி, மூன்றாமாண்டு மாணவரான அவர், போலீசார் பாதுகாப்புக்காகப் போட்டிருந்த தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் திருமலை, மாணவரை தடுத்து நிறுத்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், மாணவர், திருமலையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவரை அங்கிருந்த போலீசார் பிடித்து, சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தகவலறிந்த ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் சிபாரிசில், மாணவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யக்கூடாது என, போலீசாருக்கு உத்தரவு சென்றதாக கூறப்படுகிறது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களிடம், மாணவர் பாலச்சந்தர் தகராறில் ஈடுபட்டதாக சிறிய வழக்கு பதிவு செய்து, அபராதத் தொகை மட்டும் வசூலிக்கப்பட்டதாம். இது குறித்து போலீசார் சிலர் கூறுகையில், பணியில் இருந்த இன்ஸ்பெக்டரை, கல்லூரி மாணவர் ஒருவர், பொது இடத்தில் தாக்கியதற்கு, வழக்கு பதிவு செய்ய இயலவில்லை எனில், கீழ் நிலையில் உள்ள எங்களை போன்ற சாதாரண காவலர்களுக்கு எந்தவித பாதுகாப்பு உத்திரவாதமும் இல்லை எனப் புலம்பினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories