பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணம் கணவருக்கு வலைவீச்சு..!

kayalvele - 2026பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணம் கணவருக்கு வலைவீச்சு..!

திருப்பூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணம்; கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை.

திருப்பூர் அவினாசி ரோடு பங்களா பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் காந்தி நகரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது பனியன் நிறுவனத்தில் வெளிமாவட்ட தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வருகின்றனர். தனது பனியன் நிறுவன தொழிலாளர்களுக்காக திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனியில் உள்ள ஒரு தோட்டத்தில் 10 வீடுகளை கட்டி அதில் தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனா்.

இந்நிலையில் நேற்று அங்குள்ள 4-வது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசதொடங்கியதையடுத்து. பக்கத்து வீடுகளில் வசிக்கும் தொழிலாளர்கள் இது குறித்து பனியன் நிறுவன அதிபர் ராமசாமிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலின் பேரில் நேற்று மாலை திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

துர்நாற்றம் வந்த 4-வது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்ட இருந்தது. ஜன்னல் வழியே வீட்டுக்குள் எட்டி பார்த்த போது இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார. பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து அந்த இளம்பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீட்டில் பிணமாக கிடந்தது புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த கயல்விழி(வயது 21) என்பது தெரிய வந்தது. அவரது கணவர் விக்னேஷ்(22). இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு கடந்த ஒரு ஆண்டாக இந்த வீட்டில் இருவரும் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கயல்விழி பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்து உள்ளார். அவரது கணவர் விக்னேஷையும் காணவில்லை. இதனால் கயல்விழி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வீட்டில் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் சந்தேக மரணமாக கருதி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான அவரது கணவர் சிக்கினால் தான் அவரது சாவு குறித்து முழுவிவரம் தெரிய வரும். இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories