முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவா் ஓட,ஓட வெட்டிக் கொலை..!

criam koli - 2026முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவா் ஓட,ஓட வெட்டிக் கொலை..!

சிவகங்கை அருகே பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் கண்மாய்க்குள் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

சிவகங்கை சி.பி. காலனியை சேர்ந்தவர் ராமர். இவரது மகன் கண்ணன் (வயது 27). இவர் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பெரியார் நகரில் சொந்தமாக ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று மதியம் கண்ணன் சிவகங்கையில் உள்ள ஆட்டோ நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். மேலும் நாள்தோறும் ஆட்டோ நிலையத்திலிருந்து பக்கத்து கிராமமான ஈசனுாருக்கு பயணிகளை ஏற்றி செல்வதை வழக்கமாக செய்து வந்துள்ளார்.

நேற்று மதியம் ஒருவரை மட்டும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஈசனூருக்கு சென்றுள்ளார். அப்போது இலந்தகுடிபட்டி கண்மாய் அருகே சென்ற போது, ரோட்டில் நின்றிருந்த சிலர் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தினர். அப்போது அவர்களுடன் ஆட்டோவில் வந்தவரும் சேர்ந்து ஆட்டோ டிரைவா் கண்ணனிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்ட முயன்றனராம். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட கண்ணன் அந்த கும்பலிடமிருந்து தப்பிபதற்காக கண்மாய் பகுதிக்குள் ஓடியுள்ளார்.

ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்று கண்மாய்குள் வைத்து கண்ணனை சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர், நகர் இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் போலீசார் அங்குவந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட கண்ணன், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் ஆனந்த் என்பவருடன் தகராறு செய்து அவரது ஆட்டோ கண்ணாடியை உடைத்ததாகவும், இதுதொடர்பாக இருதரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் ஆனந்த் தரப்பினர் கண்ணனை கொலை செய்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக ஆனந்த் (28), ரஞ்சித் (27), அரவிந்த் (27), பிரவீன் (24), வசந்த் (25), அருண்பாண்டியன் (24) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக அரவிந்த், பிரவீன், வசந்த், அருண்பாண்டியன் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் ஆட்டோ டிரைவா் வெட்டி கொலை செய்யப்பட்டது. அப்பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories