சாராயம் விற்க மாமூல் கேட்டு வாட்ஸ்ஆப் ஆடியோ; சிறப்பு சப்-இன்ஸ்பெக்டா் பணியிடை நீக்கம்…..!

SSI 1 - 2026

மாமூல் கொடுக்காவிட்டால் சாராயம் விற்க கூடாது என்று வாட்ஸ்-அப்பில் பரவும் ஆடியோவால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சேகர் பணியாற்றி வந்தார். இவர் கொள்ளிடம் பகுதியில் சாராயம் விற்று வரும் ஒருவரிடம் மாமூல் கேட்டு மிரட்டி பேசிய ஆடியோ பதிவு ஒன்று வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.

அதில் செல்போனில் பேசிய அந்த நபர், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகரிடம். ‘நான் சொல்லியும் நீங்க அவரை விட்டுட்டு போகலையே பாவம் சார்’ என்று கூறுகிறார்.

அதற்கு பதில் அளித்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், அவன் மறுநாளோ, 3-ம் நாளோ போலீஸ் நிலையத்திற்கு வந்திருக்கிறான். அப்பக்கூட அவன் என்னை பார்க்கவில்லை.

என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவும் இல்லை. அதன் பின்னர் போன மாதமும் காசு கொடுக்கவில்லை.

அதற்கு முதல் மாதமும் காசு கொடுக்கவில்லை. அவன் இப்ப 2 மாதத்திற்கு காசு கொடுக்க வேண்டும்.

மாதம் ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் தேவையில்லை. முன்பு போலீசார் 15 பேர் தான் இருந்தோம். இப்போது 25 பேர் இருக்கிறோம். மாதம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 ஆயிரம், போலீசுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கிற மாதிரி இருந்தா சாராயம் விற்கட்டும். இல்லையென்றால் அவன் விற்க கூடாது என்று கூறுகிறார்.

இவ்வாறு தொடர்ந்து மாமூல் பெற்று வரும் போலீஸ் குறித்த இந்த ஆடியோ பதிவு வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் நேற்று கொள்ளிடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகரை பணியிடை நீக்கம் செய்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories