ஆம்பூர் திமுக பொதுக்கூட்டத்தில் மோதல்; பரபரப்பு…..!

mothal 2 - 2026

ஆம்பூர் அருகே அதிமுக, திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.

ஆம்பூர் அருகே உள்ள வெங்கடசமுத்திரம் கூட்ரோட்டில் பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள், ஆம்பூர், குடியாத்தம் இடைத்தேர்தல் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று இரவு நடந்தது.

இதில் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, எம்.எல்.ஏ.க்கள் வில்வநாதன், காத்தவராயன் ஆகியோர் பேசினர்.

அப்போது அ.தி.மு.க. ஆட்சியை பற்றி பேசினர். இரவு 10 மணி வரை மட்டுமே கூட்டம் நடத்த அனுமதி பெற்றுள்ளனர்.

ஆனால் 10 மணி கடந்தும் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது வெங்கட சமுத்திரம் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் சிதம்பரம் தலைமையிலான அ.தி.மு.க.வினர் அங்கு வந்தனர்.

இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டம் நடத்த கூடாது உடனே நிறுத்த வேண்டும். என அங்கிருந்த போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் பொதுக்கூட்டத்தை நிறுத்துமாறு கூறினர்.

அப்போது போலீசாருக்கும் தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

DMK ADMK Mothal - 2026

தொடர்ந்து அ.தி.மு.க.வினருடன் திமுக. வினா் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் தகாத வார்த்தைகளால் பேசி கொண்டனர்.

இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. போலீசார் இருதரப்பினரையும் சமாதானபடுத்தினர்.

இதையடுத்து அ.தி.மு.க.வினர் உமராபாத் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

அதே நேரத்தில் வெங்கடசமுத்திரம் கூட்ரோட்டில் தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர்.

இதனால் இரவு 12 மணிவரை பதட்டம் நீடித்தது. போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

2 கட்சிகள் சார்பில் தனி தனியே புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories