February 22, 2026, 12:24 AM
26.7 C
Chennai

உதயமானது தென்காசி மாவட்டம்! ஆனாலும்.. ஒரு நல்ல வாய்ப்பை இழந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி!

EDAPPADI - 2026

விதி எண் 110ன் கீழ் தென்காசி தனி மாவட்ட அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

விதி எண் 110ன் கீழ் நிர்வாக அறிவிப்புகள் பலவற்றை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உருவாக்கப் படும் என்று அறிவித்தார்.

அது போல், நெல்லை மாவட்டத்தைப் பிரித்து, தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப் படும் என்று அறிவித்தார். இதை அடுத்து, தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்திருக்கிறது. முன்னதாக, கள்ளக்குறிச்சி 33வது மாவட்டமாக உதயமானது.

நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம் புதிதாக உருவாகிறது. இதில் 3 வருவாய் கோட்டங்கள் அடங்கும்.

கடந்த 25 வருடங்களுக்கு முன்னரே, தென்காசிக்கு வாஞ்சிநாதன் பெயரை வைத்து, வாஞ்சி மாவட்டம் அறிவிக்கப் பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப் பட்டன. ஆனால் தற்போதுதான் தென்காசி மாவட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் நேற்று ஜூலை 17ம் தேதிதான் வாஞ்சிநாதன் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.

நேற்றே தென்காசி தனி மாவட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தால், வாஞ்சி நாதன் பெயரில் மாவட்டம் அமைக்கப் போராடிக் கொண்டிருந்த பலரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், வாஞ்சியின் பிறந்த நாளில் தென்காசி மாவட்டம் அறிவிக்கப் படுகிறது என்ற நற்பெயரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றிருக்கலாம். ஒரு நாள் தாமதமாக அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான வாய்ப்பை இழந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

1 COMMENT

  1. வாஞ்சி நாதன் இறந்த நாள் ஜூன் 17 , பிறந்த நாள் பற்றி குறிப்பு இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories