உதயமானது தென்காசி மாவட்டம்! ஆனாலும்.. ஒரு நல்ல வாய்ப்பை இழந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி!

EDAPPADI - 2026

விதி எண் 110ன் கீழ் தென்காசி தனி மாவட்ட அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

விதி எண் 110ன் கீழ் நிர்வாக அறிவிப்புகள் பலவற்றை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உருவாக்கப் படும் என்று அறிவித்தார்.

அது போல், நெல்லை மாவட்டத்தைப் பிரித்து, தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப் படும் என்று அறிவித்தார். இதை அடுத்து, தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்திருக்கிறது. முன்னதாக, கள்ளக்குறிச்சி 33வது மாவட்டமாக உதயமானது.

நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம் புதிதாக உருவாகிறது. இதில் 3 வருவாய் கோட்டங்கள் அடங்கும்.

கடந்த 25 வருடங்களுக்கு முன்னரே, தென்காசிக்கு வாஞ்சிநாதன் பெயரை வைத்து, வாஞ்சி மாவட்டம் அறிவிக்கப் பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப் பட்டன. ஆனால் தற்போதுதான் தென்காசி மாவட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் நேற்று ஜூலை 17ம் தேதிதான் வாஞ்சிநாதன் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.

நேற்றே தென்காசி தனி மாவட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தால், வாஞ்சி நாதன் பெயரில் மாவட்டம் அமைக்கப் போராடிக் கொண்டிருந்த பலரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், வாஞ்சியின் பிறந்த நாளில் தென்காசி மாவட்டம் அறிவிக்கப் படுகிறது என்ற நற்பெயரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றிருக்கலாம். ஒரு நாள் தாமதமாக அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான வாய்ப்பை இழந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

1 COMMENT

  1. வாஞ்சி நாதன் இறந்த நாள் ஜூன் 17 , பிறந்த நாள் பற்றி குறிப்பு இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories