உதயமானது தென்காசி மாவட்டம்! ஆனாலும்.. ஒரு நல்ல வாய்ப்பை இழந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி!

Published:

EDAPPADI - 2026

விதி எண் 110ன் கீழ் தென்காசி தனி மாவட்ட அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

விதி எண் 110ன் கீழ் நிர்வாக அறிவிப்புகள் பலவற்றை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உருவாக்கப் படும் என்று அறிவித்தார்.

அது போல், நெல்லை மாவட்டத்தைப் பிரித்து, தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப் படும் என்று அறிவித்தார். இதை அடுத்து, தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்திருக்கிறது. முன்னதாக, கள்ளக்குறிச்சி 33வது மாவட்டமாக உதயமானது.

நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம் புதிதாக உருவாகிறது. இதில் 3 வருவாய் கோட்டங்கள் அடங்கும்.

கடந்த 25 வருடங்களுக்கு முன்னரே, தென்காசிக்கு வாஞ்சிநாதன் பெயரை வைத்து, வாஞ்சி மாவட்டம் அறிவிக்கப் பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப் பட்டன. ஆனால் தற்போதுதான் தென்காசி மாவட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் நேற்று ஜூலை 17ம் தேதிதான் வாஞ்சிநாதன் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

நேற்றே தென்காசி தனி மாவட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தால், வாஞ்சி நாதன் பெயரில் மாவட்டம் அமைக்கப் போராடிக் கொண்டிருந்த பலரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், வாஞ்சியின் பிறந்த நாளில் தென்காசி மாவட்டம் அறிவிக்கப் படுகிறது என்ற நற்பெயரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றிருக்கலாம். ஒரு நாள் தாமதமாக அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான வாய்ப்பை இழந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img