ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப் பட்டது உண்மை: டாக்டர் சுதா சேஷய்யன்

சென்னை:
ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப் பட்டது உண்மைதான் என்று கூறினார் டாக்டர் சுதா சேஷய்யன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், நன்றாக நடமாடினார், இட்லி சாப்பிட்டார், நர்சுகளுடன் கலகலப்பாக உரையாடினார் என்றெல்லாம் அப்பலோ மருத்துவமனையில் இருந்து அறிக்கைகளாக வந்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென ஜெயலலிதா மரணம் அடைந்ததாக வெளியான தகவலால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மக்களிடம் உள்ள சந்தேகத்தைப் போக்கும் விதமாக சுமார் 2 மாதங்கள் கழித்து திடீரென ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. இது அப்பலோ நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது என்று அப்பலோ மருத்துவரும், இதனை ஏற்பாடு செய்துள்ளது அரசுத் தரப்பு என்று இந்த சந்திப்பில் கலந்து கொண்டவரும் ஜெயலலிதாவுக்கு மருத்துவம் செய்தவருமான லண்டன் டாக்டர் பீலேவும் கூறினர்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட டாக்டர் சுதா சேஷையன் கூறியபோது…

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது என்பது உண்மைதான். நான் அப்போது அங்கிருந்தேன். டிசம்பர் 5–ந் தேதி இரவு 12.20 மணி அளவில் பதப்படுத்தும் நடவடிக்கை தொடங்கியது. அது 15 நிமிடங்கள் நீடித்தது. பொதுவாக முக்கியநபர்கள் இறந்துவிட்டால் அவரது உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வெளியே வைப்பார்கள். அப்படி வெளியே வைக்கும்போது நமது சீதோஷ்ண நிலையில் அந்த உடல் கெட்டுப்போக வாய்ப்பு அதிகம்.

மேலும் பலரும் வந்து அவரது உடலை சுற்றி வருவார்கள். அவர்களை கட்டுப்படுத்த முடியாது. அவர்களிடம் இருந்து வரும் தூசி போன்றவற்றால் உடல் மேலும் கெடக்கூடிய சூழ்நிலை வரும். அதை தவிர்ப்பதற்காகத்தான் உடல் பதப்படுத்தப்பட்டது. இது பெரியவர்கள் மரணத்தின் போது இயல்பாக செய்யக்கூடியதுதான். அதுதான் ஜெயலலிதாவின் சாவிலும் நடந்தது.

எம்.ஜி.ஆரின் உடலும் பதப்படுத்தப்பட்டது. எம்.ஜி.ஆரின் உடலை பதப்படுத்திய அதே எம்.எம்.சி. அனாட்டமி பிரிவினர்தான் ஜெயலலிதாவின் உடலையும் பதப்படுத்தினார்கள். ஆனாலும் ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தியபோது அவரது முகத்தில் நான் எந்த துவாரத்தையும் பார்க்கவில்லை.

எக்கிமோட்டிக் புள்ளிகள் என்ற படுக்கையில் நீண்ட நாட்கள் இருப்பவர்களுக்கு நேரிடும் நிற இழப்பு நிலைதான் ஜெயலலிதாவுக்கு இருந்தது. மற்ற எல்லா உடலுக்கும் செய்வதைப் போல சாதாரண பதப்படுத்தல்தான் ஜெயலலிதாவுக்கும் செய்யப்பட்டது. அவரது முகத்தில் காணப்பட்ட புள்ளிகள் சாதாரணமானதுதான். ஆழமானது அல்ல. அவரது உதடுகள் மட்டும் தடித்திருந்தன. டிரக்கியாஸ்டமியில் வென்டிலேட்டர் போடும்போது உதடு தடிப்பது இயல்புதான். பொதுவாக பதப்படுத்தும்போது ஐந்தரை லிட்டர் ரசாயன திரவம் உடலுக்குள் செலுத்தப்படும். அது உடலுக்குள் இருக்கும் ரத்தத்துக்கு பதிலாக போய் இருந்துகொள்ளும்.

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

திசுக்கள் ஒருவேளை கெட்டுப்போய் இருந்தால் அந்த பகுதியில் மட்டும் அந்த திரவம் கசிந்து வெளியேறும். ஆனால் ஜெயலலிதாவின் உடலுக்கு அப்படிப்பட்ட நிலை ஏற்படவில்லை. பத்திரிகையாளர் கூறுவதைப்போல, முகத்தில் புள்ளிகள், ஓட்டைகள் இருந்திருந்தால், அதன் வழியாக திரவம் கசிந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. தானியங்கி எந்திரம் மூலமாகத்தான் திரவத்தை உடலுக்குள் ஏற்றினோம். அவ்வளவு வேகத்தில் ஏற்றும்போது, எந்த இடத்திலும் இயல்புக்கு மாறான திரவ கசிவு இருக்கவே இல்லை. மற்றவர்களுக்கு ஏற்படும் இயல்பான நிலைதான் இருந்தது. எனவே தேவையற்ற ஓட்டைகள், வெட்டி ஒட்ட வைக்கும் சம்பவம் எதுவும் ஜெயலலிதாவின் உடலுக்கு செய்யப்படவில்லை – என்று அவர் கூறினார்.

முன்னர், அவர் உடல் எம்பால்மிங் செய்யப் படவில்லை என்று அப்பலோ தரப்பில் கூறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories