ரசிகர் சந்திப்பு மகிழ்ச்சி: ரஜினி ட்வீட்

Published:

 

IMG 20170515 122312 - 2026

சென்னை:

ரசிகர்களுடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததாக, நடிகர் ரஜினி காந்த் டிவிட்டரில் கூறியுள்ளார். இது நினைவில் கொள்ளத்தக்கது, மறக்க இயலாதது என்றும் ஹாஷ் டாக் அடித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த நான்கு தினங்களாக ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களுடன் பேசினார் ரஜினிகாந்த். அப்போது அரசியல் பேச்சுக்களும் எழுந்தது.

ரஜினியின் ரசிகர் சந்திப்பு என்றாலே பெருத்த எதிர்பார்ப்பு இருக்கும். அண்மைக் காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால், அந்த எதிர்பார்ப்பு இப்போது மேலும் கூடிவிட்டது. ஜெயலலிதா மறைவு, கருணாநிதி உடல் நலமின்றி முடங்கிக் கிடப்பது, ஆட்சியாளர்களிடையே ஏற்பட்ட பிளவு என்று பலவித நிலையற்ற சூழலால், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஊடகங்கள் பெரிதும் ரஜினி குறித்த செய்தியை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ரசிகர் சந்திப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக ரஜினி காந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

அவரது ட்வீட்:

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img