கொரோனா அதிகரிக்க காரணம்… திமுக.,வின் ‘ஒன்றிணைவோம் வா’ தான்: சிபிஆர் குற்றச்சாட்டு!

cpradhakrishnan interview
cpradhakrishnan interview

தமிழ்நாட்டில் திமுக ஆதரவாளர்களால் தான் கொரோனா பரவியதாக தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது  பேசிய அவர், பிரதமர் மோடி தமிழ் பண்பாட்டின் மீது மிகப்பெரிய மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார் என தெரிவித்தார்.

ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக்கல்லூரியை தமிழகத்திற்கு தந்தவர் பிரதமர் மோடி எனவும், மதுரையில் எய்ம்ஸ் கனவை சாத்தியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 180 ஆக இருந்த கூலி 200 ஆக உயர்ந்துள்ளது எனவும், ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு 9.5 கோடி விவசாயிகள் பயன்பெறுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். 

cpradhakrishnan interview
cpradhakrishnan interview

சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், கோவையில் ஜூன் முதல் வாரத்தில் மட்டும்145 கோடி ரூபாய் சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகளில் கடன் வழங்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

சிறுவாணி அணையில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீர் கேரள அரசால் தடுக்கப்பட்டு வருகிறது எனவும், ஆனால் கம்யூனிஸ்ட்கள் அதை தட்டி கேட்காமல் நாதியற்று கிடக்கிறார்கள் என கூறினார். 

பெட்ரோல் டீசல் விலையை ஜி எஸ்.டி கீழ் கொண்டு வர வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம் எனவும், மாநில அரசுகளின் ஒப்புதலோடு பெட்ரோல்- டீசல் விலைகள் ஜி.எஸ்.டி கீழ் கொண்டு வரப்படும். என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுவாணி அணை விவாகரத்தில் கேரளாவோடு மோதல் போக்கை மேற்கொள்ளாமல் பேசி தீர்க்க வேண்டும் என மாநில அரசு எண்ணுவதாகவும், இலவச மின்சாரம் திட்டம் ஒரு போதும் ரத்து செய்யப்படாது, இலவச மின்சாரம் ரத்து என்பது திமுகவின் அடுத்த பொய்பிரச்சாரம் என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா இறப்பு விவகாரத்தில் புள்ளி விவரங்களில் சிறு பிழை இருந்துள்ளது, அதனை தமிழக அரசே ஒப்புக்கொண்டு அதனை சரிசெய்துள்ளது எனவும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் திமுக ஆதரவாளர்களால் தான் கொரோனா பரவியது எனவும், ஜமாத்தில் பங்குபெற்றதன் காரணமாகதான் கொரோனா தமிழகத்தில் வேகமாக பரவியது என சொல்லாமல் எதிர்கட்சிகள் தயங்கியது ஏன் எனவும் அவர் தெரிவித்தார். 

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

எதிர்கட்சிகள் அரசு எடுக்கின்ற நல்முயற்சிகளை எதிர்க்கக்கூடாது எனவும், ஆளும் அரசின் தவறுகளை சுட்டி காட்டி நல்முயற்சிகளை வரவேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் வழிப்பாட்டு தலங்கள் திறப்பு விவகாரங்களில் தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் எனவும், தற்போது கொரோனா பரவல் சென்னையில் இருப்பதால் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டாம் என தமிழக அரசு எண்ணுகிறது. அதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம்… என்று அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories